என்னவளே!

Su.tha Arivalagan
Jun 22, 2026,04:10 PM IST

- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி 


நான் பண்ணிய

புண்ணியம் யாவையும் 

உந்தனை என்னிடம் 

சேர்த்ததுவோ!


நான் செய்த தவமோ

எனது வேண்டுதலின் பலனோ

நீயும் என்னை 

விரும்புவதோ!


பற்றினேன் பற்றற்றான் பற்றினை

அவன் கொணர்ந்து 

தந்தானோ

உன்னை என்னிடம்!




நான் உன்னை விரும்புவதும் 

நீ என்னை விரும்புவதும் 

பூர்வ ஜென்ம 

தொடர்கதையோ!


முற்களாய் இருந்தேன்!

முல்லை மலராய் மாற்றினாய்! 

மூங்கிலாய் இருந்தேன்!

புல்லாங்குழலாய் ஆக்கினாய்! 


இறைவன் கருணை 

காட்டினான்! 

வாழ்வே இனிதாய் 

ஆக்கினான்! 


(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளேன்)