- இரா. மும்தாஜ் பேகம்
என்னை வார்த்தெடுக்க
இறைவன் எனக்களித்த இணையற்ற அருட்கொடை
என்அன்னையும் தந்தையும்
அன்னை கரம் நீட்டி அவர்தான் உன் தந்தை என்றாள்
அவருக்கு நிகர் ஒருவர் அவனியில் இல்லை என்பேன்
மண்ணுக்கு மரம் அழகு
மண்ணுக்கு மழை அழகு
கண்ணுக்கு இமை அழகு
இந்தப் பெண்ணுக்குஎன் தந்தையே பேரழகு
அவர்துன்பத்தை அகத்தில் புதைத்து
இன்பத்தை வெளியில் காட்டியவர்
அன்பதனை செயலில் காட்டியவர்

தன் துயர் மறைத்து, தன்வலி மறைத்து
காலமெல்லாம் உழைத்து
கண்ணியத்தோடு எங்களை காத்து வந்த கடவுள்
பசி என்று கூறி நான் பார்த்ததில்லை
பட்டகாயங்களின் வலியையும்
வெளியில்கூறியதில்லை
எச்சி கிளாஸ் கழுவினார், எண்ணி எண்ணி செலவு செய்வார்
உப்பு மூட்டை தூக்கிச் சென்று
ஊர் ஊராய் விற்று வந்தார்
எங்களை கரை சேர்க்க என்னென்ன
அவதாரம் எடுத்தார்
அந்நிய நாடு சென்று அங்கேயும் கூலி வேலை
அவர் பெற்ற துயருக்கு அளவே இல்லை
இதுபோன்றே வாழ்கின்றார்
(இரா. மும்தாஜ் பேகம், கிரியேட்டிவ் ரைட்டர்ஸ், திருச்சி)
தொகுதி மறுவரையறை.. அனைத்துக் கட்சி எம்.பிக்கள் கூட்டத்திற்கு முதல்வர் விஜய் அழைப்பு!
Double Meaning talks: மனிதர்கள் எப்போது டபுள் மீனிங் + கெட்ட வார்த்தையில் பேச ஆரம்பிக்கிறார்கள்?
தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2026 : அறிவிக்கப்பட்ட திட்டங்களும், ஒதுக்கப்பட்ட நிதியும்
தமிழக வேளாண் பட்ஜெட் விவசாயிகள் ஏமாற்றம்...எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையனுடன் அதிமுக அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் திடீர் சந்திப்பு
பிரதமர் மோடியின் 2026-ஆம் ஆண்டு வெளிநாட்டு பயணச் செலவு: மத்திய அரசு வெளியிட்ட தகவல்!
“வெற்றிப் பயணம் தொடரட்டும்!”: அமைச்சர்களுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து!
தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2026-27: திமுக, தேமுதிக.,வின் கருத்து என்ன?
முருக பக்தியின் மகத்துவம் பேசும் ஆடி கிருத்திகை –காவடி, பால்குடம், பக்தி பேரலை
{{comments.comment}}