- டிலாணி ஸ்ரீதரன்
உயிரணுவில் உயிராக்கி
உலகத்தைக் காட்டியவரே
உடலை வருத்தியே
உயிராய்த் தாங்கியவரே,
கவலைகளை மறைத்து
கண்ணாய்க் காத்தவரே
தோளிலமர்த்தி அகிலத்தை
சுற்றித் திரிந்தவரே,
நான் அழுதால்
அம்மாவைத் திட்டுபவரே
பிரிந்தே வாழ்ந்தேனே
பிள்ளைப் பருவத்திலிருந்தே,

திருமணமாகியும் குழந்தையாக
என்னை அணைப்பவரே
அயல்நாட்டுக்குச்
செல்ல வேண்டாமென
அழுதவரே,
காலனவனின் பிடியிலே
சிக்கித் தவிப்பவரே
சிந்தையும் கலங்கி
மெளனமாக சிதைகின்றேனே,
உள்ளொன்றும் புறமொன்றுமாக
உணர்வுகளோடு
தவிக்கின்றேனே
தொலைவுத்தான்
உங்களருகே
வரவிடாமல் தடுக்கிறதே,
தொடருகிறதே தொய்வில்லாமல் நோயுங்களை துரத்தியே
மன்றாடி கேட்கிறேன்
உங்கள் உயிரை,
மாசற்ற உங்களின்
மழலை சிரிப்பை
மனம் உடைந்து
தனியாய் தவிக்கிறேனே,
உள்ளுக்குள் இறந்தும்
வெளியில் சிறந்தும்
உருகியே தினம்
மெழுகாய் நானும்,
உதிரமும் உறைகிறது
உறக்கமும் இரக்கமின்றி கொல்கிறது
ஊசலாடும் உங்கள் உயிரும் என் உருகித் தவிக்கும் என்னிதயமும்
நிம்மதியடைவது எப்போது????🥲🥲🥲
அப்பா என்ற அழகுத் தமிழை சொல்லிக் கொடுக்க மறந்தீர்களா???
இதுவரை அப்பா என்று கூப்பிட்டதில்லையே....
டெடி
எடுக்கும் பிறவியெல்லாம் உங்களுக்கு மாத்திரமே மகளாத் துடிக்கும்.....
உங்கள் மகள்!
தொகுதி மறுவரையறை.. அனைத்துக் கட்சி எம்.பிக்கள் கூட்டத்திற்கு முதல்வர் விஜய் அழைப்பு!
Double Meaning talks: மனிதர்கள் எப்போது டபுள் மீனிங் + கெட்ட வார்த்தையில் பேச ஆரம்பிக்கிறார்கள்?
தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2026 : அறிவிக்கப்பட்ட திட்டங்களும், ஒதுக்கப்பட்ட நிதியும்
தமிழக வேளாண் பட்ஜெட் விவசாயிகள் ஏமாற்றம்...எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையனுடன் அதிமுக அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் திடீர் சந்திப்பு
பிரதமர் மோடியின் 2026-ஆம் ஆண்டு வெளிநாட்டு பயணச் செலவு: மத்திய அரசு வெளியிட்ட தகவல்!
“வெற்றிப் பயணம் தொடரட்டும்!”: அமைச்சர்களுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து!
தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2026-27: திமுக, தேமுதிக.,வின் கருத்து என்ன?
முருக பக்தியின் மகத்துவம் பேசும் ஆடி கிருத்திகை –காவடி, பால்குடம், பக்தி பேரலை
{{comments.comment}}