இன்னுயிர் நீ என் அருகில் வா!

Su.tha Arivalagan
Jul 29, 2026,03:04 PM IST

- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி


காதல் தீபம் ஏற்றவா?

கண்மணி தீபம் ஏற்ற வா!

என்னுயிர் நீ என மகிழவா?

இன்னுயிர் நீ என் அருகில் வா!


எந்தன் அன்பினை 

உன்னிடம் சொல்லவா?

உந்தன் சம்மதம் 

கொஞ்சம் சொல்ல வா!


தேவனும் தேவியும் 

நாம் அல்லவா! 

தேவதை நீ எந்தன் 

உயிர் அல்லவா! 


நான் வாழ்வது உனக்கென

நான் சொல்லவா? 

நீ வாழ்வது எனக்கென 

நீ சொல்ல வா!




என் நினைவிலும் கனவிலும் 

நீ அல்லவா! 

எனை உயிரென நினைப்பவள்

நீ அல்லவா!


நான் வாழ்வதே என்றும் 

உனக்கல்லவா!

உன் வாழ்வே நான்தான் 

எனச் சொல்ல வா!


(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளேன்)