அன்னையாய் மாறுகிறாய்.. ஆறுதலாய்ப் பேசுகிறாய்!
- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி
உன் மடிமீது
குழந்தையாக
மாறுகிறேன்
மனதளவில்!
அகவை அறுபதைத்
தாண்டிய முதியவனாக
இருக்கிறேன்
வயதளவில்!
அன்னையாய்
மாறுகிறாய்!
ஆறுதலாய்ப்
பேசுகிறாய்!
கொடுத்து வைத்தவன்
நான் என்று
ஊர் உலகம்
பேசுகிறது!
தவம் செய்தவன்
நான் அல்ல!
தனம் படைத்தவன்
நான் அல்ல!
ஆனால் என்னை
அவ்வளவு நேசிக்கிறாய்!
ஆண்டவனாய் என்
கண்களுக்குத் தெரிகிறாய்!
உயர்ந்த குணம்
உனக்கு!
தெளிந்த மனம்
உனக்கு!
ஆருயிர் மனைவியாக நீ!
ஆகாயத் தேவதையாக நீ!
ஆச்சரியத்தில் நான்!
அன்னபூரணியாய் நீ!
என் முன்னோர் செய்த
புண்ணியமா!
ஏழ் பிறப்பாய்த்
தொடர்கின்ற உறவா!
மகிழ்கிறேன் பெண்ணே!
உன் மனதில் ஒரு
களங்கம்
இல்லை!
கவலை
இல்லை!
(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்)