என் மகிழ்ச்சியின் ஆணிவேர்!

Aug 14, 2026,02:29 PM IST

மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி 


எப்போதும் 

புது முகமாகத்

தோன்றும் 

உன் பூ முகம் 


ஒரு நாள் சற்றே லேசாக 

வாடி இருந்தால் கூட 

என் முகம் 

வதங்கி விடுகிறது! 


சற்றே தலைவலி 

என்று நீ கூறினால் கூட 

என் உள்ளம் 

கருகுகிறது! 


மனம் 

பதை பதைக்கிறது!

இதயம் 

துடி துடிக்கிறது!


உன் நலத்தையே 

நாளும் 

என் மனம் 

நாடுகிறது! 




உன்னைப் பற்றி 

நான் எழுதும் 

கவிதையில் 

கண்ணீர் கசிகிறது!


உனது உடல் நலம் 

தேறும் வரை 

எனது மனநலம் 

தவிப்பாய்த் தவிக்கிறது!


உனது உடல்நலம் 

சரியானால் தான் எனது 

நாட்காட்டி இயல்பு

நிலையைக் காட்டுகிறது!


எனக்கு என்னவோ 

நம் ஈருயிரும் ஓர் உயிராய் 

இணைந்த 

வாழ்க்கையில் 


என் மகிழ்ச்சியின்

ஆணிவேர் 

அஸ்திவாரம் 

எல்லாம் நீ தான்! 


உனக்காக இறைவனிடம் 

உரிமையோடு 

வாக்குவாதம் 

செய்கிறேன்! 


இறைவன் 

அருள்கிறான்! 

இருக்கிறோம் 

நலமாக! 


(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்