- மீனா கணேஷ்
இனியவனே எழுந்திரு
புலர்ந்திடும் இந்தப் பொழுது
உனக்காகத்தான் . . . .
துணிந்தவனே துணைக்குவா
உன் இடர்களை களைந்து
வீர நடை போட்டு வா . . . .
அன்பானவனே
அதிர்ந்த நடையோடு
அனைத்திலும் எழுந்துவா . . .
நட்பானவனே
அத்தனையிலும்
துணையிருக்கிறேன் வா . . .
புதிதானவனே
புன்னகையில் வெற்றியைக்
கொண்டு வா . . .
தோழனே தோல்வி உனக்கில்லை
தோழமை இன்னும் கிடைக்கும் வா
தோற்காது வா . .

விமர்சிக்க முடியாதவனே
எந்த விமர்சனத்திலும்
அடங்காது உன் வெற்றி
அதனால் இன்னும்
விரைந்து வா . . . .
வரிசை கட்டி நிற்கும்
தீபங்கள் உனக்குள்ளும்
நின்று வெற்றி ஒளியை வீசட்டும்
புத்தொளியாய் புறப்பட்டு வா . . .
இன்னல்கள் நீங்கி
இன்முகத்தோடு வா
தொடரட்டும் உன்
வெற்றிப் பயணம்
தொடர்வேன் நானும் . . . . .
இந்த உலகத்தில் உனை
ஒப்பிட்டு பார்ப்பதற்கு
ஒன்றுமில்லை வா . . . . . !
(திருநெல்வேலியைச் சேர்ந்த மீனா கணேஷ், கவிஞர், சிந்தனையாளர், பாடகர் மற்றும் எழுத்தாளர்)
புன்னகையில் வெற்றியைக் கொண்டு வா!
ஆடி வெள்ளி மட்டுமல்ல.. பூரமும் கூட.. இன்றைய நாளின் சிறப்புகள்!
Happay Independence Day: 80 ஆண்டுகள் தொட்டு விட்டோம்.. எழுச்சி எண்ணம் தொடர்ந்திட்டோம்!
புராணங்கள் நிறைந்தது பண்டைய பாரதம்... விரோதங்கள் நிறைந்தது இடைக்கால பாரதம்!
சுதந்திர தினம்.. அச்சத்தை மடமையாக்கி அறவழியில் வாழ்ந்தவனே !
தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: நீலகிரி, தேனி மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு!
காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு தாக்கல்
தமிழக முதலீட்டாளர்கள் மாநாடு: ரூ.67,452 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்து
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது மண் திருட்டுப் புகார்: லஞ்ச ஒழிப்புத் துறையில் மனு!
{{comments.comment}}