உனைப் போற்றி வாழ்கின்ற என்னை வாழ வைக்கிறாய்!

Su.tha Arivalagan
Aug 22, 2026,10:50 AM IST

மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி 


தனைப்  போற்றி 

வாழ்கின்ற பக்தர்களைக்

காக்கின்றக் கடவுள் போல் 


உனைப் போற்றி 

வாழ்கின்ற என்னை 

வாழ வைக்கிறாய் என்னவளே! 


எனைப் போற்றி 

மகிழ்கின்ற மக்களைக் காணும் 

நாள் என்று வருமோ?


உழைப்பைப் போற்றி

முயற்சியைப் போற்றி

வாழ்கின்ற வாழ்க்கையில் 




வெற்றி நமைப் போற்றி 

நிச்சயம் வருமே!-என்

இனியவளே போற்றி போற்றி! 


சீர் கொண்ட நற்குணமும்

சிறப்பான பண்பும் 

கொண்ட உனைப் போற்றி 


வாழும்போது உலகமே போற்ற

நம்மை வாழச் செய்யும் 

கடவுளே போற்றி போற்றி! 


(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்)