ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்.. பழமொழியும் உண்மைப் பொருளும்!
- ஆ.வ.உமாதேவி
இப்பழமொழி இதே பொருளில் கொள்வதானால், நாட்டில் மக்கள் தொகை பெருக்கம் அதிகரிக்கும் வாய்ப்பு மிகவும் குறையும்.
மிகப் பழங்காலத்தில் எம். டி.,எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்ற டாக்டர்கள் கிடையாது. கலர் கலர் மாத்திரைகளும் கிடையாது. நோயின் தன்மைக்கு ஏற்ப மூலிகைகளை கண்டறிந்து அவற்றை மருந்தாக கொடுத்தனர்.
இந்த மூலிகைகள் பலவற்றிற்கு வேர்களே அடிப்படையாய் உள்ளன. இந்த வேர்களை நோய்க்கு ஏற்ற வகையில் நசுக்கி நோயுற்றவருக்கு கொடுத்து சிகிச்சை அளித்து வந்தனர். உதாரணமாக பாம்பு கடி என்றால், கடிவாயில் வேரை நசுக்கி சாற்றை பிரிவார்கள் இவ்வாறு வேர்களை பயன்படுத்தி வைத்தியம் செய்த வைத்திய முறையை குறிக்கும் வகையில் சொல்லப்பட்ட பழமொழி தான் "ஆயிரம் வேரை கொன்றவன் அரை வைத்தியன்".
காலப்போக்கில் இது ஆயிரம் "பேரை" கொன்றவன் அரை வைத்தியன் என தவறாக பயன்படுத்தப்பட்டு வரத் தொடங்கியது. "வேரை" என்பதை "பேரை" என்று நம் ஆட்கள் மாற்றி விட்டனர்.
உண்மையை அறிந்த நாம் இனி சரியான பழமொழியை பயன்படுத்துவோம்.
(ஆ.வ. உமாதேவி, இடைநிலை ஆசிரியர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம், முருக்கம்பட்டு காலனியைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியி் பணியாற்றுகிறார்)