- ஆ.வ.உமாதேவி
தாய் இல்லாமல் நான் இல்லை!
தாய்மொழி இல்லாமல் எவரும் இல்லை!
தாயை மதிப்பவன், தாய் மண்ணை மட்டுமல்ல, தாய் மொழியையும் மதிப்பான்!
நம் தமிழை விட சிறந்த மொழி
நான் கண்டதில்லை.

தமிழ் மொழி மெல்ல
தன் நிலையை
இழப்பதை,
சில இடங்களில்
காண முடிகிறது.
ஆங்கில மோகம் கொண்ட
அன்பு பெற்றோர்,
தனியார் பள்ளியை
நாடியே,
பிள்ளைகளை சேர்க்கின்றனர்.
நர்சரியில் சிறு செடி
வாங்கும் போது கூட
தாய் மண்ணோடு தான் தருகிறார்கள்.
ஆனால், நாமோ
நம் குழந்தையை
நர்சரி பள்ளியில்
விடும்போது,
சேர்த்து
பிரிய வேண்டியுள்ளது.
சில பள்ளிகளில்
தமிழில் பேசினால்
தண்டனையாம்!
என்ன கொடுமை சரவணன்!
என்று சொல்லத் தோன்றுகிறது.
ஆங்கில மோகம் கொண்ட
பெற்றோரின் பிள்ளைகள் பாவம்!
ஆங்கிலத்தையும் சரியாக படிக்காமல்,
தமிழும் தகராறாகி,
"நெடுநல்வாடை"
என்பதை
"நெடுநாள் வடை"
என்று தேவையில்லாத இடங்களில்,
காலை உன்றியும்
காலை ஒடித்தும்
தமிழை
கொலை செய்கின்றனர்.
எதிர்வரும் நாட்களில்
தமிழுக்கு
பயிற்சி வகுப்புகள்
தொடங்கப்படுமோ?
என அச்சத்தில்
உள்ள, தமிழ் பற்றாளர்கள்.
(ஆ.வ. உமாதேவி, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம், முருக்கம்பட்டு காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக இருக்கிறார்)
தண்ணீர் திறந்தது கர்நாடகா : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
"தனிமைப்பட்டு நிற்கிறார் CM" – காவிரி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறைகேடு? - திமுக என்.ஆர்.இளங்கோ பரபரப்பு பேட்டி!
ஒற்றுமையின்றி செயல்படுபவர்களுக்கு கட்சியில் இடமில்லை : ராகுல் காந்தி எச்சரிக்கை
கபிணி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு.. போராட்டக்காரர்களுக்கு டி.கே.சிவக்குமார் எச்சரிக்கை
வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.200 குறைவு: ஓட்டல் உரிமையாளர்கள் நிம்மதி!
வேளாண் பட்ஜெட் 2026: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து சிறப்பு பூஜை செய்த அமைச்சர் வினோத்!
கட்டணச்சலுகை இல்லாவிட்டாலும் UDID அட்டை இருந்தால் சிறப்பு பெட்டிகளில் பயணிக்கலாம்!
தோப்பு வெங்கடாசலம் கட்சிப் பொறுப்பிலிருந்து விடுவிப்பு: திமுக தலைமை அதிரடி அறிவிப்பு!
{{comments.comment}}