- ஆ.வ.உமாதேவி
தாய் இல்லாமல் நான் இல்லை!
தாய்மொழி இல்லாமல் எவரும் இல்லை!
தாயை மதிப்பவன், தாய் மண்ணை மட்டுமல்ல, தாய் மொழியையும் மதிப்பான்!
நம் தமிழை விட சிறந்த மொழி
நான் கண்டதில்லை.

தமிழ் மொழி மெல்ல
தன் நிலையை
இழப்பதை,
சில இடங்களில்
காண முடிகிறது.
ஆங்கில மோகம் கொண்ட
அன்பு பெற்றோர்,
தனியார் பள்ளியை
நாடியே,
பிள்ளைகளை சேர்க்கின்றனர்.
நர்சரியில் சிறு செடி
வாங்கும் போது கூட
தாய் மண்ணோடு தான் தருகிறார்கள்.
ஆனால், நாமோ
நம் குழந்தையை
நர்சரி பள்ளியில்
விடும்போது,
சேர்த்து
பிரிய வேண்டியுள்ளது.
சில பள்ளிகளில்
தமிழில் பேசினால்
தண்டனையாம்!
என்ன கொடுமை சரவணன்!
என்று சொல்லத் தோன்றுகிறது.
ஆங்கில மோகம் கொண்ட
பெற்றோரின் பிள்ளைகள் பாவம்!
ஆங்கிலத்தையும் சரியாக படிக்காமல்,
தமிழும் தகராறாகி,
"நெடுநல்வாடை"
என்பதை
"நெடுநாள் வடை"
என்று தேவையில்லாத இடங்களில்,
காலை உன்றியும்
காலை ஒடித்தும்
தமிழை
கொலை செய்கின்றனர்.
எதிர்வரும் நாட்களில்
தமிழுக்கு
பயிற்சி வகுப்புகள்
தொடங்கப்படுமோ?
என அச்சத்தில்
உள்ள, தமிழ் பற்றாளர்கள்.
(ஆ.வ. உமாதேவி, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம், முருக்கம்பட்டு காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக இருக்கிறார்)
TVK wins: தவெகவின் இந்த பிரம்மாண்ட வெற்றிக்கு என்ன காரணம்?
வெற்றியை நிர்ணயிக்க போகும் 119 தொகுதிகள்...நொடிக்கு நொடி மாறும் முன்னிலை
CM MK Stalin: மு.க.ஸ்டாலின் இல்லாத தமிழ்நாடு சட்டசபை.. பெரும் வேதனையில் திமுக!
பாஜகவுக்கு ஷாக் கொடுத்த அதிமுக.. கஷ்டப்பட்டு கூட்டணி சேர்ந்தும் பலனில்லையே!
போராடும் அதிமுக-திமுக: சீனியர்களின் தோல்விக்கு SIR காரணமா?
இட்டுனு வந்து இட்டுனு போறது கஷ்டம்.. தி.நகர் தொகுதியில் திரில் வெற்றியைப் பெற்ற புஸ்ஸி ஆனந்த்!
தவெக அரசுக்கு முதல் கோரிக்கை.. கணினி அறிவியல் பாடத்தை அரசு பள்ளிகளில் கட்டாயமாக்க கோரிக்கை!
Time to Lead: இனி அரசியல் மாறும்.. தலைவர்கள் மாறுவார்கள்.. விஜய் போட்ட புதிய பாதை!
ஜஸ்ட் மிஸ் ஆனாரா எடப்பாடி பழனிச்சாமி?.. விஜய் ஆதரவு சுயேச்சை வாங்கிய ஓட்டுக்களைப் பாருங்க!
{{comments.comment}}