- மோ. லட்சுமி
எத்தனை எத்தனை சக்தி...
எத்தனை எத்தனை யுக்தி...
அத்தனையும் மொத்தமான
செல்வத்துள் செல்வமே அம்மா...
மம்மி என்றாலும் மனம் மலராது...
மதர் என்றாலும் குணம் மாறாது...
அம்மா என்ற மந்திரத்தை
உச்சரித்தால் வரும் மெய் சிலிர்ப்பு...
என் தாய் மொழியால் வந்த சக்தியா...
என் தாயால் வந்த முக்தியா....
அம்மா என்ற வார்த்தையின் மாயம்....
ஆற்றிடுமே அனைத்து காயம்....
கண்மூடி அம்மா என்றால் வரும் சுகம்...
அதைக் கடக்க போதாது ஒரு யுகம்...
அம்மா என்றால் உதடுகளும் ஒட்டும்.....
அது நம் உணர்வுகளையும் பெரிதாய் தட்டும்....
அம்மாவிற்கு ஈடு இணை இல்லை...
அவளே என் வாழ்வின் எல்லை....!
(மோ. லட்சுமி, திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு தாலுகா, பெரியகளக்காட்டூர் தொடக்கப் பள்ளி ஆசிரியர்)
அமைச்சர் உறுதிமொழியை ஏற்று.. இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு
யாரையும் ஜெயிக்க வைக்க நான் வரலை.. நான் ஜெயிக்க வந்திருக்கேன்.. விஜய் அதிரடி
ஆசிரியர்களை பழி வாங்குவது திமுக அரசின் சர்வாதிகாரப் போக்கு தான் காரணம்: அண்ணாமலை
கூட்டணி குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை: பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பேட்டி
வெள்ளி விலை ஒரே நாளில் இருமுறை வீழ்ச்சி: என்ன நடந்தது?
தங்கம் விலை நேற்றைய விலையைத் தொடர்ந்து இன்றும் குறைவு... எவ்வளவு குறைவு தெரியுமா?
பாமக வேட்பாளர் நேர்காணல் தொடக்கம்...கட்சிப் பிளவுக்கு மத்தியில் ராமதாஸ் அதிரடி
கர்நாடகாவின் பிரபலமான ரியல் எஸ்டேட் அதிபர் சி.ஜே. ராய் எடுத்த விபரீத முடிவு!
மத்திய பட்ஜெட் 2026: எந்தெந்த பொருட்களின் விலை குறையும், எவற்றில் விலை அதிகரிக்கும்?
{{comments.comment}}