அம்மா....!

Jan 31, 2026,05:20 PM IST

- மோ. லட்சுமி


எத்தனை எத்தனை சக்தி...

எத்தனை எத்தனை யுக்தி...

அத்தனையும் மொத்தமான 

செல்வத்துள் செல்வமே அம்மா...

மம்மி என்றாலும் மனம் மலராது...

மதர் என்றாலும் குணம் மாறாது...

அம்மா என்ற மந்திரத்தை 

உச்சரித்தால் வரும் மெய் சிலிர்ப்பு...




என் தாய் மொழியால் வந்த சக்தியா...

என் தாயால் வந்த முக்தியா....

அம்மா என்ற வார்த்தையின் மாயம்....

ஆற்றிடுமே அனைத்து காயம்.... 

கண்மூடி அம்மா என்றால் வரும் சுகம்...

அதைக் கடக்க போதாது ஒரு யுகம்...

அம்மா என்றால் உதடுகளும் ஒட்டும்.....

அது நம் உணர்வுகளையும் பெரிதாய் தட்டும்....

அம்மாவிற்கு ஈடு இணை இல்லை...

அவளே என் வாழ்வின் எல்லை....!


(மோ. லட்சுமி, திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு தாலுகா, பெரியகளக்காட்டூர் தொடக்கப் பள்ளி ஆசிரியர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும்.. ஆளுநர் உரையில் இடம் பெற்ற அதிரடி அறிவிப்பு

news

ஆளுநர் உரை எப்படி இருந்தது? உதயநிதி ஸ்டாலின் சொன்ன பதில்

news

எந்த கொம்பனாலும் அதிமுக.,வை அசைக்க முடியாது : இபிஎஸ் உறுதி

news

அடுத்த வாரம் மின்வாரிய வெள்ளை அறிக்கை...அமைச்சர் நிர்மல்குமார் அறிவிப்பு

news

உலக யோகா தின விழா: மாணவர்களுக்கு யோகாவின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு

news

ஐக்கிய அரபு அமீரகத்தில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சோஷியல் மீடியா பயன்படுத்த தடை

news

இன்று ஒரு புதிய உதயம்...ஆளுநர் நெகிழ்ச்சி பதிவு...எதுக்கு தெரியுமா?

news

நீண்ட இடைவெளிக்குப் பிறகு.. ஆளுநர் உரையை முழுமையாக படித்தார் ஆளுநர் ஆர்லேகர்!

news

எம்மை குளிர்விக்க வந்தவளே....!

அதிகம் பார்க்கும் செய்திகள்