ஓடும் நதி ஓசையிலே.. தோடி ராகம் கேட்குதே!

Su.tha Arivalagan
Jul 23, 2026,12:43 PM IST

- கவிஞர் பி.எஸ்.முருகேசன்


குயில் வந்து 

கூவும் என்று


கூட்டை விட்டு 

பறந்து வந்தேன்


காகம் வந்து 

அமர்ந்து கொண்டு


கத்திக் கரைகிறது 

கூட்டமாக சேர்ந்து 


காட்டத்தோடு கூட்டை 

களைத்துவிட எண்ணுகிறேன்


பாவம் அதுவென்றே

பரிதாபம் கொள்ளுகிறேன்




கோபம் குறைந்து

குளிரும் மனசு


குயில் இடும் 

முட்டைக்கும் சேர்த்து


அடை காப்பதும் 

காகம் தானே


என்று விடைபெற்றேன் 

வேறு இடம்


மயில் ஆடும் 

சோலையிலே


மானும் துள்ளி 

ஆடுதே


ஓடும் நதி

ஓசையிலே


தோடி ராகம் 

கேட்குதே


பறவைகளின் சத்தம் 

பாங்காக ஒலிக்குதே


பழங்கள் உண்ண 

பறவை எச்சத்திலே


விதை கிடந்து 

முளைக்குதே


விதை முளைத்து 

விருட்சமாக


பறவைகளும் வசிக்குதே


வான் மழையும் 

காற்றும் தந்து


வாழ்வு கொடுக்கும் 

மரங்களே


மரம் வளர்ப்போம் 

மழை பெறுவோம்