வள்ளுவன் தாத்தா சொன்னார் அன்று .. செல்லில் உலகம் செல்லுது இங்கு!

Su.tha Arivalagan
Aug 26, 2026,03:05 PM IST

- கவிஞர் பிஎஸ் முருகேசன், திண்டுக்கல்


நிரந்தரம் என்று 

எதுவுமே இல்லை

நிலையில்லாத உலகத்திலே 

விலை கொடுத்து 

வாங்கிய பொருளும் 

வீணாய்ப் போகுது 

சமயத்திலே 


நினைப்பது எல்லாம் 

நிற்பதும் இல்லை 

நிமிடத்தில் மாறும் இதயத்திலே 

மேகம் சூழ்ந்திட 

ஒளியும் தராது 

உதிக்கும் சூரியன் 

வானத்திலே 




தொடரும் நிழலும் 

தொடர்ந்து வராது 

இருளில் இருக்கும் 

இடம் தெரியாது

எல்லாமே இங்கே 

மாயம் தானே 

சொல்லாத சொல்லும் 

செல்லாது வீணே


கல்லாத மனிதன் 

குருடன் என்று 

வள்ளுவன் தாத்தா 

சொன்னார் அன்று 

செல்லில் உலகம் 

செல்லுது இங்கு 

செவிடன் காதில் 

ஓதிய சங்கு 


(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)