மங்கையிவள் மனசு மச்சான் பேரே சொல்லும்!

Su.tha Arivalagan
Aug 11, 2026,10:22 AM IST

- கவிஞர் பி.எஸ். முருகேசன்


சின்னப்பொண்ணு வாடி

சேர்ந்திடுவோம் ஜோடி


கன்னத்திலே நீயும் 

முத்தம் ஒன்னு தாடி


வண்ண வண்ண சேலை 

வாங்கி வந்து தாரேன்


உடுத்திக் கிட்டு நீயும் 

ஒய்யாரமாய் வாடி


ஒதடு ரொம்ப செகப்பு 

உதிர்க்குமடி சிரிப்பு


கள்ளம் கபடம் இல்லேயடி 

கண்மணியே உனக்கு




கண் போல பாத்துக்கணும் 

என்னுடைய பொறுப்பு


மாமன் பெத்த மகளே 

மலரும் ரோஜா இதழே


அலை போல 

தவழ்ந்து வந்து 

அள்ளிக் கொள்ளும் முகிலே


ஆழ்கடலில் முத்தே 

ஆலமர வித்தே


அவதாரம் பத்தே 

அடியேனின் சொத்தே


மடைதிறந்த வெள்ளம் 

மகிழ்ச்சியோடு துள்ளும்


மங்கையிவள் மனசு 

மச்சான் பேரே சொல்லும்


கங்கை போல 

பாய்ந்து வந்து 

கண்ணே உந்தன் 

உள்ளம் 


கவர்ந்து கொண்டு 

செல்லுமடி காரிகை யின் இல்லம்


(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)