வானவில்!

Su.tha Arivalagan
Jun 01, 2026,04:30 PM IST

- இரா. மும்தாஜ் பேகம்


மழைத்துளிகளின் பிரதிபலிப்பு வானவில்.

மாணிக்கப் பரல்களையெல்லாம்

மாலையாய் 

கோர்த்தார் போல்.

ஏழு வண்ண கற்கள்கோர்க்கப்பட்ட வண்ணமாலைவானவில்.

வான வீதியின் வண்ண விளக்குகள்,

வசியம் செய்யும்

வானவில் பாவைகள்.

பாவைகளுக்காக போட்டியிடும் நண்பர்கள்.




மேகக்கூட்டங்கள் 

காதலிகளைத் தேடி

கால்வலிக்க ஓடி 

களைத்த பொழுதினில்

உடல் கருத்து

உள்ளம்நொந்து

ஓ..வென்று

அழுவதுதான் மழையோ?


மின்னல் நண்பர்கள்

கோபக்கனல் வீச... 

இடிநண்பர்களோ

எடுத்துரைத்து புத்திகூற

 டம....டமா சண்டைக்கு பின் 

மேகக்கூட்டங்கள் 

தெளிவாகிப்போனார்கள்,

வானவில்லின்

வண்ணப் பாவைகளை

கண்டு களித்த பின்பு.


(கவிஞர் இரா.மும்தாஜ் பேகம், கிரியேட்டிவ் ரைட்டர்ஸ், திருச்சி)