- க. யாஸ்மின் சிராஜூதீன்
ரோஜா மலர்களின் மாநாடு நடக்குதாம் ...
தொடக்க உரையுடன் தொடங்குதாம்
கூடி என்ன பேசுதாம்....
சிரித்து பேசி மகிழுதாம்...
சிங்காரமாய் நடந்து பாக்குதாம்
பாட்டெல்லாம் பாடுதாம்...
தோட்டம் எல்லாம் வாசம் வீசுதாம்
கதிரவனை வணங்கி மகிழுதாம்
விவசாயிக்கு நன்றி செலுத்துதாம்
மலர்மாலையாகி பிறருக்கு உதவ
முடிவு செய்ததாம்...
தன்னை வளர்த்த விவசாயிக்கு தானும்
உதவ நினைத்ததாம்...
நிறைய பூக்கள் பூத்து குலுங்க ஆணையிட்டதாம்...

மலர்கள் பூத்து சிரித்தன...
விவசாயி முகம் மலரவே...
உதவியின் சிறப்பை நாமும்
உணரவே.....
பிறருக்கு உதவி செய்து மகிழ்ந்திடுவோம்...
சிறந்த வாழ்கை வாழ்ந்திடுவோம்....!!!
மகிழ்ச்சிக் கடலில் நீந்துதாம்..
வாழ்க்கையின் பயனை அடைந்ததாய்....
நன்றி உரை சொன்னதாம்...!!!
இனிதே கூட்டம் முடிந்ததாம்....!!!
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)
World Letter Writing day: கஷ்டப்பட்டு கடிதம் எழுதி எத்தனை நாளாச்சு!
தாங்கி பிடிக்க தாயும் தூக்கி நிறுத்த தந்தையும் இருந்தால்!
உலக கடித தினம்.. இனிய நினைவுகளுக்கு வணக்கம்!
செம்மொழியான தமிழ் மொழியே
நம்பிக்கையின் முளை மனதில்!
கரிய நிற காகமே.. காத்திருப்பேன் உனக்காக!
செப்டம்பர் மாதம்.. செப்டம்பர் மாதம்.. 2026ம் ஆண்டின் 9வது மாதம்.. சிறப்புகள்!
பாட்டிகள் பற்றிய சுவாரஸ்யமான கட்டுரை!
அழகிய மாற்றம்!
{{comments.comment}}