- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி
ஆடி வெள்ளி வந்தது!
ஓடி வெள்ளி வந்தது!
பாடி வெள்ளி வந்தது!
வாடி வள்ளி! நாம்
தேடும் வெள்ளி
என்று வாங்குவது?
வெள்ளி போய்
வெள்ளி வந்தால்
வெள்ளி விலை ஏறுது!
தள்ளி நின்று
பார்ப்பதாகத்தான் நமக்கு
வெள்ளி காட்சி கொடுக்குது!

ஆடி வெள்ளி போய்
ஆவணி வெள்ளி வந்தாலும்
நாம் தேடும் வெள்ளியை
வாங்க முடியுமா?
அதற்காக நாம் என்றும்
ஏங்க முடியுமா?
உனக்கு வெள்ளிக் கொலுசு
வாங்கா விட்டால் என்னால்
தூங்க முடியுமா!
வெள்ளிக்கு ராக்கெட்
அனுப்பியது போல்
வெள்ளி விலை ஏறுது!
சுள்ளி பொறுக்கும்
ஏழை எல்லாம் என்று
வெள்ளி காண்பது?
வெள்ளிச் சுக்கிரன்
வேந்தன் எல்லாம்
ஏழைகளின் எதிரியோ?
வெகு தூரமோ?
(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளேன்).
World Letter Writing day: கஷ்டப்பட்டு கடிதம் எழுதி எத்தனை நாளாச்சு!
தாங்கி பிடிக்க தாயும் தூக்கி நிறுத்த தந்தையும் இருந்தால்!
உலக கடித தினம்.. இனிய நினைவுகளுக்கு வணக்கம்!
செம்மொழியான தமிழ் மொழியே
நம்பிக்கையின் முளை மனதில்!
கரிய நிற காகமே.. காத்திருப்பேன் உனக்காக!
செப்டம்பர் மாதம்.. செப்டம்பர் மாதம்.. 2026ம் ஆண்டின் 9வது மாதம்.. சிறப்புகள்!
பாட்டிகள் பற்றிய சுவாரஸ்யமான கட்டுரை!
அழகிய மாற்றம்!
{{comments.comment}}