உலக கடித தினம்.. இனிய நினைவுகளுக்கு வணக்கம்!

Sep 01, 2026,04:56 PM IST

- தி. மீரா


எழுதும் கைநுணுக்கத்தின்

இனிய நினைவுகளுக்கு வணக்கம்


காகிதத்தில் மலர்ந்த

மனம் திறந்த வார்த்தைகள்

தூரத்தை நெருக்கமாக்கும் தீபங்கள்


“நலம் நலமறிய ஆவல்”

அன்புள்ள என்ற ஆரம்பம்

என்ற வரிகளில் தொடங்கும்


அன்பின் முதல் துடிப்பு,

அம்மா, அப்பா, நண்பர்,

ஆசிரியர், காதலி,

யாவருக்கும் செல்லும்

உள்ளத்தின் நேரடி மொழி




மையிலே கலந்த உணர்வுகள்

கண்ணீராய் வழிந்தாலும்

அவை ஒவ்வொன்றும்

நினைவாக உறையும்


காத்திருப்பு நெடியதாய் இருந்தாலும்

கடிதம் வந்த கணம்

மகிழ்ச்சி மலர்கிறது


அஞ்சல் பெட்டிக்குள் விழும்

ஒரு சிறு உறை கூட

பாசத்தின் பெரிய பயணம்


இன்றைய வேக உலகில்

மெதுவாய் எழுதப்படும்

ஒரு கடிதம்

நெஞ்சின் நிழலாகத் தங்கும்


எழுதும் ஒவ்வொரு சொல்லும்

அன்பின் அச்சாகி,

வாசிக்கும் ஒவ்வொரு நொடியும்

உறவின் இசையாகி


உலக கடித தினம்

நினைவுகளை இணைக்கும்

மனத்தின் முத்திரை


கைஎழுத்தின் அழகு

கரைந்திடாத காதல்

கடிதம் என்பது

காலம் காப்பதற்கான

கருணைமிகு கலை


என்றென்றும் வாழ்க

அந்த அன்பின் எழுத்து

அந்த இதயத்தின்

அழியாத மொழி.


(தி.மீரா, ஈரோடு)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்