- டிலாணி ஸ்ரீதரன்
செந்தாமரை அழகுடையாள் !
செங்காந்தள் நிறமுடையாள்!
செவ்விதழின் தன்மையுடையாள் !
செந்நீரின் வீரமுடையாள்!
செதுக்கலில் கலையுடையாள்!
செப்பிடும் நாவுடையாள்!
செவ்வரத்தை குணமுடையாள்!
செவ்வாழை தண்டுடையாள்!
செந்தேன் சொல்லுடையாள்!
செப்பனிடும் பொருளுடையாள்!

செங்கனிச் சுவையுடையாள்!
செவ்வாயில் உயிர்ப்புடையாள்!
செவ்விள நீரென தாகமுடையாள்!
செழிப்பென
புகழுடையாள்!
செல்வமென நிறையுடையாள்!
செழுமையென வளமுடையாள்!
செந்தமிழென மொழியுடையாள்!
செம்மையான தாய்மொழியானவள்!
செங்குருதியென என்னுள் உறைந்தவள்!
செம்மொழியான தமிழ் மொழியே
தாங்கி பிடிக்க தாயும் தூக்கி நிறுத்த தந்தையும் இருந்தால்!
இயற்கை நீதி!
பால் முதல் மின்சாரம் வரை...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட 6 அறிவிப்புக்கள்
ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டு வர முடியும்...அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் அதிர்ந்த சட்டசபை
மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்
கொளத்தூர் தேர்தல் வழக்கு: தீர்ப்பை தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்...சம்பள உயர்வு, தீபாவளி முன்பணம் அறிவிப்பு
சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் இருக்கை மாற்றம்...மாணிக்க தாகூர் சொன்ன பதில்
{{comments.comment}}