மாற்றம் எப்ப நிகழும் என்று விடையும் புரியலே!

Aug 29, 2026,12:45 PM IST

- கவிஞர் பி.எஸ் முருகேசன்

 

கடன்மேல கடன வாங்கி 

காளமாடு ரெண்டு வாங்கி


காடு வயல் உழுதும் 

இங்கே கவலை தீரலே


களனி எங்கும் 

விளைய வச்சும் கடனும் தீரலே (கடன்மேல)


வாங்க வாங்க கடனும் 

இங்கே வளர்ந்து போகுது


வரவு எல்லாம் 

வட்டிக்குள்ள 

முடங்கிப் போகுது


ஊருக்கெல்லாம் உணவு தரும் 

உழவன் பசி தீரலே

பாடுபட்டு பாடுபட்டும் 

பலனும் ஒன்னுமில்ல (கடன்மேல)




வானத்தை நம்பி

வரகு வெதச்சோம்


வானம் மழை பொழியலே


வாடிப்போகும் பயிரு 

மீட்க வழியும் தெரியலே


மண்ண நம்பும் 

மனுசனுக்கு வாழ்க்கை 

விடியலே


மாற்றம் எப்ப 

நிகழும் என்று

விடையும் புரியலே (கடன்மேல)


(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சிந்தனைச் சிதறல்.. தேடல் சரியானதாக இருந்தால் தேர்வும் சரியானதாகவே இருக்கும்!

news

கண்மணி!

news

மாற்றம் எப்ப நிகழும் என்று விடையும் புரியலே!

news

ஓ போஸ்ட் ஆபீஸ் இப்படித்தான் செயல்படுதா?.. நேரில் பார்த்து அறிந்த மாணவர்கள்!

news

ஜல்லிக்கட்டை தடை செய்யத் திட்டமா.. சோழவந்தான் தவெக எம்எல்ஏ பேச்சுக்கு அதிமுக கண்டனம்

news

Work from Home: நவீன வாழ்வியலின் வரப்பிரசாதம்.. ஆனால் அதன் அருமை பலருக்குப் புரியலையே!

news

தொகுதியின் பெயருக்குப் பின் ப்ராக்கெட் தேவையில்லை .. முதல்வருக்கு விசிக எம்.பி கோரிக்கை

news

சிந்தனைச் சிதறல்.. தெரியாமல் இருப்பதைவிட, தெரிந்துகொள்ள முயலாமல் இருப்பதே ஆபத்தானது!

news

தலை சீவி பொட்டு வச்சு தாலிக்கு மஞ்சள தொட்டு வச்சு!

அதிகம் பார்க்கும் செய்திகள்