இயற்கை நீதி!

Sep 01, 2026,09:46 AM IST

- விஜயலக்ஷ்மி கண்ணன் 


பூமியின் கோபம்

யாரைத் திருத்திடவோ?


வானத்தின் ஆர்ப்பாட்டம்

யாரை நிலைப்படுத்த?


இடர்கள் பலவும் கண்டோம்

பேர் இடர்களும்

கண்டு கொதித்தோம்!

மாண்டவர்கள் பலர்

மண்ணோடு புதைந்தவர்கள் பல நூறு

மீண்டவர்கள் ஒரு சிலரே!




இயற்கையின் நியதியை

செயற்கை முறை கொண்டு

எதிர்த்தால்


நடக்கும் விபரீதம் நில

நடுக்கம்

அடக்க முடியா கோரத் தாண்டவம்!


மனிதன் மனம் மாறினானா?

தர்மம் எனும் பாதையில் நடந்தானா?

கொடுமைகள் நிறுத்தினானா?


பிறர் சொத்தை கொள்ளையடித்தான்.

பிறர் மனைவியை அபகரித்தான்.


குள்ளநரி வேஷம் போட்டான்.

குல்லா போட்டு

நோகடித்தான்.


அன்னையின் கோபம்

அவன் கண்டு கொள்ளவில்லை.

அவனும் கண் எதிரே காணாமல் போய் விட்டான்.


நீதிக்கு கண் இல்லை!


(விஜயலக்ஷ்மி கண்ணன் வழக்கறிஞர், கவிஞர், எழுத்தாளர், பட்டிமன்றப் பேச்சாளர் என பன்முகம் கொண்டவர். வசிப்பது சென்னை அருகே கூடுவாஞ்சேரி)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

செம்மொழியான தமிழ் மொழியே

news

தாங்கி பிடிக்க தாயும் தூக்கி நிறுத்த தந்தையும் இருந்தால்!

news

இயற்கை நீதி!

news

பால் முதல் மின்சாரம் வரை...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட 6 அறிவிப்புக்கள்

news

ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டு வர முடியும்...அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் அதிர்ந்த சட்டசபை

news

மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்

news

கொளத்தூர் தேர்தல் வழக்கு: தீர்ப்பை தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

news

டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்...சம்பள உயர்வு, தீபாவளி முன்பணம் அறிவிப்பு

news

சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் இருக்கை மாற்றம்...மாணிக்க தாகூர் சொன்ன பதில்

அதிகம் பார்க்கும் செய்திகள்