கடவுளோடு கைகுலுக்கு இந்திரனிடம் ஏதாவது கேள்

Su.tha Arivalagan
Aug 14, 2026,01:58 PM IST

- மொழிப்பித்தன் இரா.ச.குமார்


இது

விரலுயர்த்தி வானம்

தொட்டு

இறுதியில் எமனையும் சந்திக்கும் முயற்சி...


-


ஊக்குவிக்க மட்டும்

நீங்கள்

பின் தொடரலாம் நடக்காது

முடியாதென்பவர்

யாரேனுமிருந்தால்

சொல்லிக்கொள்ளாமலே

பின் வாங்கலாம்...


-


உங்களுக்கான

திசை வேறு

அதற்கே

எழுதிய வார்த்தைகளில் கொஞ்சம் கடுமை...


-




முகில் துண்டொன்றை

எட்டி 

பிடித்தாயிற்று

அடுத்து

வானம் தொட பயிற்சி...


-


வானம் தொட்டதும் 

வான் பரப்பில்

கொண்டாட்டாம்...


-


இடியை இடிக்கச்சொல்லி 

காது கிழிய கேட்டு விட்டு

மின்னலையும்

மின்ன சொல்வோம்...

_


வாய்ப்பிருந்தால்

நிலவில் விருந்து

விண்மீன்களோடு 

உற்சாக

கும்மாளம்...


_


கடவுளர்களை கண்டு 

கைகுலுக்கி புகைப்படமொன்று எடுத்துக்கொண்டு

இன்னும்

நேரமிருந்தால்

இந்திர சபைக்கு

இந்த பயணம்...


-


எதிர்படும் எமனிடம்

ஏனிந்த இறப்பென

கேட்போமா?..


-


எந்த நாள் 

எம் இறுதியென

ஆயுள் குறித்தும்

அடுத்தொரு

கேள்வி தொடுப்போமா?..



சித்திரகுப்தனிருந்தால்

எழுதிய ஏடுகளில்

யார் யாருக்கு எத்தனை

ஆண்டென இறுதியாய் கேட்டு திரும்பலாமா?..


-


பின்தொடர்ந்து

ஊக்குவித்தவருக்கு

நன்றி

இனி அடுத்து

நமக்கு

அல்லது இவனாகிய எனக்கு

சுட்டெரிக்கும் சூரியனே இலக்கு