என் தமிழ் என் தமிழ் என சங்கே முழங்கு....!
Feb 02, 2026,04:32 PM IST
- இரா. மும்தாஜ் பேகம்
திக்கெட்டும் தமிழ் முழங்க,
தீந்தமிழில்
பாக்கள் ஒலிக்க
மூவேந்தர் வளர்த்திட்ட
என் தமிழ் வளர்ந்திடவே. சங்கே முழங்கு!
குமரிக்கண்டத்திலே
குழந்தையாய்உருவெடுத்து
பன்னிலை வளங்கள் கண்ட
பாண்டியன்வளத்திட்ட தமிழ் என்று
சங்கே முழங்கு!
தேனில் கரும்பில்
தீஞ்சுவையாய்
வானில்கதிரோன்
அறிவொளியாய்
ஊனில்,உயிரில்
கலந்திருக்கும்
உன்னததமிழென்று
சங்கே முழங்கு!
பாரதியும்,பாரதிதாசனும்,
பகுத்தறிவு பெரியாரும்.
வாலியும், வைரமுத்தும்
வளர்த்திட்ட
என் தமிழ் வளர்க என்று
சங்கே முழங்கு!
ஔவையின்ஆத்திச்சூடியை
ஔடதமாய்
ஏற்று நாளும்
வள்ளுவனின் முப்பாலால்
வளர்ந்திட்ட
என் தமிழ் என்று
சங்கே முழங்கு!
தாழை மடல் போல்
தமிழ் மனம் பரவிடவே
ஏடுகளை ஏந்தி
நாம்
வளர்ப்போம் என்று
சங்கே முழங்கு!
(கவிஞர் இரா. மும்தாஜ் பேகம், பட்டதாரி ஆசிரியர்)