ஆதலால் காதல் செய்வீர்!

Su.tha Arivalagan
Apr 24, 2026,10:56 AM IST

- கவியமுது சு.பிரபாகரன்


சொல்லில் அடங்கிடாச் சொப்பன சுந்தரியே..
சொல்லிட முடியா அழகின் பேருருவே..

சொர்க்கத்தின் வாயிலாய் வாழ்க்கையே நீதானென்று..
சொல்லத்தான் நினைக்கிறேன் உள்ளத்தால் துடிக்கிறேன்..!

விழிகளின் காதல் விரிந்திடும் வானமாய்.. 
மொழிகள் இல்லாத மௌனமொழியாய் காதல்மொழி..! 

விழிப்  போரில் வீரம் காட்டிடாது.. 
விதிப்படி சேர்ந்தேன் மேகத்துள் நீர்த்திவலைகளாய்..! 

பார்வையின் பரவசத்தில் பஞ்சாய்ப் பறந்து.. 
பிரபஞ்சம் மொத்தமும் களித்துத் திரிந்தேனே..! 





அன்பின் அரவணைப்பில் ஆனந்தம் நீண்டு.. 
ஆயுள் வரையிலும் நீங்காது நிலைத்திருப்பேன்..!

(கவியமுது சு.பிரபாகரன், ஆசிரியர்,  விழுப்புரம்)