- மொழிப்பித்தன் இரா.ச.குமார்
நானோ நெருங்குகிறேன்
நீயோ விலகுகிறாய்
சரி
நெருங்குவதை கைவிடுகிறேன்
நீ விலகலை விட்டு தொலை...
--
காற்று கை வீசி நடக்குமளவு
நமக்கிடையே
ஒரு இடைவெளி
எப்போதும் இருக்கட்டுமென
நிபந்தனையற்ற
ஒப்பந்தம் ஒன்றை எழுதலாமா?..
--

நான் நெருங்குவது
நீ விலகுவது தொடர்கதையானால்
முடிவென்பதுதான் எப்போது?..
--
வேலை வெட்டியற்ற முற்றுப்புள்ளி ஒன்று
வெட்டியாய்
என் சொற்களோரம் கிடக்கிறது...
--
அந்த
ஒற்றை முற்றுப்புள்ளி
தன்னை
பயன்படுத்தி சொல்லி
இடையூறாகிறது சொற்களுக்கு மத்தியிலே நின்று...
--
ஒட்டி உரசுமளவு
கூட வேண்டாம்
அது
தேவைப்படுவதுமில்லை
சற்று ஒரு இடைவெளிவிட்டு நெருங்கேன்
உன் மூச்சுக்காற்றின்
வெப்பத்தை
நான் உணருமளவிலான
தூரத்தில்...
--
நான் முடிவுரையெழுதி
முற்றுப்புள்ளியிட்டு
முடிக்க முடிவு செய்கிறேன்
நீயோ தொடருமென
தயங்கி தயங்கி
இடுகிறாய் அரைப்புள்ளி...
--
இந்த புள்ளிகளை தூக்கியெறிவதா
இருந்து தொலைகிறதென
இருப்பில் வைக்கவா?..
--
முற்றும் போடுகிறேன்
எழுதும்
இந்த கவிதைக்கு...
--
முற்றுமென முடிந்தது
இனி
எந்த புள்ளிக்கும் இங்கு இடமிருக்காது
இன்னொரு கவிதை எழுதும் வரை...
ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு
ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!
நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!
முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு
நீட் தேர்வு போராட்டம்.. இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகிறது திமுக.. மு.க.ஸ்டாலின்
ராகுல் காந்தி கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது.. முதல்வர் விஜய் கண்டனம்
போதையில் கார் ஓட்டிய வழக்கு: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு சிறை தண்டனையா?
முடிவுக்கு வந்தது பாமக விவகாரம்...அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ராமதாஸ்
{{comments.comment}}