Deepa Ravi Poem: உன் அருகில் நான் அமர்ந்தால்.. என் மனமோ!

Apr 22, 2026,05:58 PM IST

- ஔவை அ.ர.தீபாரவி


உன் அருகே 

நான் இருந்தால்..

உலகம் எல்லாம் 

என் அருகில்..


உன் அருகில்

நான் நடந்தால்

போகும் பாதை

அது நீளம்..


உன் அருகில் நான் அமர்ந்தால்

என் மனமோ

சிறகு விரிக்கும்..




உன் மொழிகள்

நான் கேட்டால்

என் செவியில்

தேனும் பாயும்


உன் வலிகள்

நான் உணர்ந்தால்

என் விழிகள் 

நீரைச் சிந்தும்


உன் வெற்றி 

நான் கண்டால்

என் உள்ளம்

மகிழ்வில் ஆடும்


உன் கைகள்

நான் கோர்த்தால்

என் ஆயுள் காலம்

கூடும்..


உன் கோபம்

நான் கண்டால்

என் உள்ளம் 

மௌனம் காக்கும் 


உன் பேச்சில்

கண் வீச்சில்

என் மௌனம் 

தொலைந்தோடும்..


உன் அருகில் 

வாழ்விருந்தால்

என் வானம்

மழை தூவும்..!


(தமிழ் அருவி வழங்கும் சித்திரமும் கவிதையும் நிகழ்ச்சியில் பங்கேற்ற கவிதை. ஔவை அ.ர.தீபாரவி கோவையைச் சேர்ந்தவர். பி.காம்.டி.டி.எட், தமிழ் இசை இலக்கிய ஆர்வலர். தமிழ் பாடுவோம், தமிழ் அருவி, கவித்துளி நிறுவனர். ஈரவிழி இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளர். ஐந்தாண்டு காலமாக இணையத்தில் ஈடில்லாத் தமிழ் சேவை. கவிஞர்களை ஊக்கப்படுத்தும் பணிதனைச் செவ்வனே செய்து வருகிறார். கவிஞர்களின் உள்ளாார்ந்த திறனை வெளிக்கொண்டு வருவதே இவருடைய நோக்கம்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு

news

ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!

news

நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!

news

முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!

news

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு

news

நீட் தேர்வு போராட்டம்.. இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகிறது திமுக.. மு.க.ஸ்டாலின்

news

ராகுல் காந்தி கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது.. முதல்வர் விஜய் கண்டனம்

news

போதையில் கார் ஓட்டிய வழக்கு: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு சிறை தண்டனையா?

news

முடிவுக்கு வந்தது பாமக விவகாரம்...அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ராமதாஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்