- ஔவை அ.ர.தீபாரவி
உன் அருகே
நான் இருந்தால்..
உலகம் எல்லாம்
என் அருகில்..
உன் அருகில்
நான் நடந்தால்
போகும் பாதை
அது நீளம்..
உன் அருகில் நான் அமர்ந்தால்
என் மனமோ
சிறகு விரிக்கும்..

உன் மொழிகள்
நான் கேட்டால்
என் செவியில்
தேனும் பாயும்
உன் வலிகள்
நான் உணர்ந்தால்
என் விழிகள்
நீரைச் சிந்தும்
உன் வெற்றி
நான் கண்டால்
என் உள்ளம்
மகிழ்வில் ஆடும்
உன் கைகள்
நான் கோர்த்தால்
என் ஆயுள் காலம்
கூடும்..
உன் கோபம்
நான் கண்டால்
என் உள்ளம்
மௌனம் காக்கும்
உன் பேச்சில்
கண் வீச்சில்
என் மௌனம்
தொலைந்தோடும்..
உன் அருகில்
வாழ்விருந்தால்
(தமிழ் அருவி வழங்கும் சித்திரமும் கவிதையும் நிகழ்ச்சியில் பங்கேற்ற கவிதை. ஔவை அ.ர.தீபாரவி கோவையைச் சேர்ந்தவர். பி.காம்.டி.டி.எட், தமிழ் இசை இலக்கிய ஆர்வலர். தமிழ் பாடுவோம், தமிழ் அருவி, கவித்துளி நிறுவனர். ஈரவிழி இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளர். ஐந்தாண்டு காலமாக இணையத்தில் ஈடில்லாத் தமிழ் சேவை. கவிஞர்களை ஊக்கப்படுத்தும் பணிதனைச் செவ்வனே செய்து வருகிறார். கவிஞர்களின் உள்ளாார்ந்த திறனை வெளிக்கொண்டு வருவதே இவருடைய நோக்கம்).
அமைச்சர் ஆனந்த் முன்னிலையில்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், மு.சி. சம்பத்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026: இந்திய அணியில் சூர்யவன்ஷி.. ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்!
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.. திருக்குறள் கதைகள்
Classical Tamil: செம்மொழியாகிய தமிழ் மொழியே!
Tamil Poem: மன(தின்)வலி
Tamil Short Story: மக்களின் மனம்!
வீரம் வெளஞ்ச மண்ணு!
ஜூன் ஆறு வந்தது சிறப்பு நாளே !
Tamil Poem: பூவே பொன்பூவே
{{comments.comment}}