உயிரிலே உருவான வீடு
- சாந்தி சின்னத்தம்பி
அ ன்பான உறவுகள் குழுமிடும்...
ஆ யிரம் உணர்வுகள் பொதிந்திடும்...
இ தயங்கள் அன்பால் இணைந்திடும்...
ஈ ரமான விழிகளைத் துடைத்திடும்...
உ ள்ளன்போடு உறவாடிடும்...
ஊ ழ்வினைக் காலத்தும் காத்திடும்...
எ ன்னுள்ளே எனை உணர்த்திடும்...
ஏ க்கங்களை என்றும் தீர்த்திடும்...
ஐ ந்தருவி போல் மகிழ்ச்சி கொட்டிடும்...
ஒ ப்பனை இன்றியே விளங்கிடும்...
ஓ வியக்காட்சியாய் ஒளிர்ந்திடும்....
ஒள வையின் மொழியை ஆண்டிடும் உயிரிலே உருவானதே என் வீடு.
(செ.சாந்தி சின்னத்தம்பி, அரசுப் பள்ளி தமிழாசிரியர்(ஓய்வு) மதுரை. சேலம் , பாரதியார் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் பணிபுரிந்துள்ளேன். (2 ஆண்டுகள்) ஆர்வம்: கவிதை, இசை,பாடல், நாடகம் புனைதல். வெளியிட்ட கவிதை நூல்கள்: 2. 1. விழி மூடி யோசித்தால் 2. மௌனமும் பழகிடு. தொகுப்பு நூல்கள். 4. சென்னையில் நடந்த நேரடி கவிதை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றது பெருமை)