- சசிகலா விஸ்வநாதன்
காலியாகும் வாடகை வீடு!
ஒவ்வொரு அறையாக சுற்றி வந்தேன்!
நீங்கா நினைவுகளின்
சுழல்களில் மேலிருந்து
கீழே கீழே...
மூழ்கி விடுபட்டு;
எழுந்து மிதக்கிறேன்!
சில நினைவுகளை இங்கேயே விட்டு விடலாம்; என்று நினைத்தாலும்;
இயலுமா?
சில நினைவுகள் இங்கேயே இருக்கட்டும்.
வெற்று சுவர்கள்
எதிரொலித்து; எதிரொலித்து அவை நீர்த்தே போகட்டும்!
அவை அப்படியே முடிவதுதான் உகந்தது!

ஆனாலும்;
சில கனவுகளை எடுத்துச் செல்கிறேன்;
இங்கிருந்த நினைவுகள் கொடுத்த பரிசுகளாக!
நினைவுகளே கனவுகளை காட்சியாக்கும்!
வாழ்வுக்கு நிறம் கூட்டும்.
இன்று துளசி மாட அகல்
சுடர்விட்டு ஒளிர்கிறதோ!
அம்மாவின் குரல்:
"ஏதேனும் விட்டுப் போக வேண்டும்!
எடுத்து போகுதல் ஆகாது."
"வேண்டா நினைவுகளும்
கூடா கனவுகளும்"
இங்கேயே இருக்கட்டும்!"
" சரிம்மா"!
(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில் இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்; வானமே எல்லை; கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)
ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு
ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!
நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!
முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு
நீட் தேர்வு போராட்டம்.. இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகிறது திமுக.. மு.க.ஸ்டாலின்
ராகுல் காந்தி கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது.. முதல்வர் விஜய் கண்டனம்
போதையில் கார் ஓட்டிய வழக்கு: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு சிறை தண்டனையா?
முடிவுக்கு வந்தது பாமக விவகாரம்...அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ராமதாஸ்
{{comments.comment}}