- சசிகலா விஸ்வநாதன்
காலியாகும் வாடகை வீடு!
ஒவ்வொரு அறையாக சுற்றி வந்தேன்!
நீங்கா நினைவுகளின்
சுழல்களில் மேலிருந்து
கீழே கீழே...
மூழ்கி விடுபட்டு;
எழுந்து மிதக்கிறேன்!
சில நினைவுகளை இங்கேயே விட்டு விடலாம்; என்று நினைத்தாலும்;
இயலுமா?
சில நினைவுகள் இங்கேயே இருக்கட்டும்.
வெற்று சுவர்கள்
எதிரொலித்து; எதிரொலித்து அவை நீர்த்தே போகட்டும்!
அவை அப்படியே முடிவதுதான் உகந்தது!

ஆனாலும்;
சில கனவுகளை எடுத்துச் செல்கிறேன்;
இங்கிருந்த நினைவுகள் கொடுத்த பரிசுகளாக!
நினைவுகளே கனவுகளை காட்சியாக்கும்!
வாழ்வுக்கு நிறம் கூட்டும்.
இன்று துளசி மாட அகல்
சுடர்விட்டு ஒளிர்கிறதோ!
அம்மாவின் குரல்:
"ஏதேனும் விட்டுப் போக வேண்டும்!
எடுத்து போகுதல் ஆகாது."
"வேண்டா நினைவுகளும்
கூடா கனவுகளும்"
இங்கேயே இருக்கட்டும்!"
" சரிம்மா"!
(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில் இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்; வானமே எல்லை; கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}