ஒரு வீடு காலியாகிறது!

Jul 22, 2026,04:45 PM IST

- சசிகலா விஸ்வநாதன்


காலியாகும் வாடகை வீடு!


ஒவ்வொரு அறையாக சுற்றி வந்தேன்!

நீங்கா நினைவுகளின்

சுழல்களில் மேலிருந்து 

கீழே கீழே... 

மூழ்கி விடுபட்டு; 

எழுந்து மிதக்கிறேன்!

 

சில நினைவுகளை இங்கேயே  விட்டு விடலாம்; என்று நினைத்தாலும்; 

இயலுமா? 

சில நினைவுகள் இங்கேயே இருக்கட்டும்.

வெற்று சுவர்கள்

எதிரொலித்து; எதிரொலித்து  அவை நீர்த்தே போகட்டும்!

அவை அப்படியே முடிவதுதான் உகந்தது!




ஆனாலும்;

சில கனவுகளை எடுத்துச் செல்கிறேன்;

இங்கிருந்த நினைவுகள் கொடுத்த  பரிசுகளாக!

நினைவுகளே கனவுகளை காட்சியாக்கும்!

வாழ்வுக்கு நிறம் கூட்டும்.


இன்று துளசி மாட அகல்

சுடர்விட்டு  ஒளிர்கிறதோ!


அம்மாவின் குரல்:

 "ஏதேனும் விட்டுப் போக வேண்டும்!

எல்லாவற்றையும் துடைத்தது போல்         

எடுத்து போகுதல்  ஆகாது." 


"வேண்டா நினைவுகளும்

கூடா கனவுகளும்" 

இங்கேயே இருக்கட்டும்!"


" சரிம்மா"!


(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில்  இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்;  வானமே எல்லை;  கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு  கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்