சில்லெனக் குளிர வைக்கும் அன்பு மழலை எச்சில் முத்தம்...!
- செ. சாந்தி சின்னத்தம்பி, மதுரை
இளமை!
கண்டதெல்லாம் பிடிச்சுப்போகும் ...
கள்ளமில்லா மனசு அலைபாயும்...
நல்லதா கெட்டதா எனப்புரியாமல் தவிக்கும் ...
நல்லோர் சொல்லையும் நசுக்கிப் புறந்தள்ளும்...
காண்பதே நிஜமென்று கனவுகளில் மிதந்து செல்லும் ...
-
குளிர்ச்சி
ஆயிரம் கவலைகள் மனதை எரித்திருந்தாலும்
சில்லெனக் குளிர வைக்கும்
அன்பு மழலை எச்சில் முத்தம்...
-
ஒரு சொல்
பல நூறு புத்தகம் படித்திருந்தாலும்
பலர் பேசும் உரை கேட்டிருந்தாலும்
மாற்றத்தைத் தருவது
உள்ளம் தொடும் ஒரு சொல்...
-
ஞாபகம்
ரோஜாவாய்ப் பூத்திருந்தால் மணம்....
நெருஞ்சி முள்ளாய் இருந்தால் ரணம்...
-
ஆலமரம்
பிள்ளைகளின் ஊஞ்சல்.... பறவைகளின் இருப்பிடம்....
தீர்ப்பு கூறும் நீதிமன்றம்....
பாதசாரியின் பள்ளியறை...!
(செ.சாந்தி சின்னத்தம்பி, அரசுப் பள்ளி தமிழாசிரியர்(ஓய்வு) மதுரை. சேலம் , பாரதியார் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் பணிபுரிந்துள்ளேன். (2 ஆண்டுகள்) ஆர்வம்: கவிதை, இசை,பாடல், நாடகம் புனைதல். வெளியிட்ட கவிதை நூல்கள்: 2. 1. விழி மூடி யோசித்தால் 2. மௌனமும் பழகிடு. தொகுப்பு நூல்கள். 4. சென்னையில் நடந்த நேரடி கவிதை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றது பெருமை)