எளிமையின் முரண்

Su.tha Arivalagan
Sep 10, 2026,03:20 PM IST

- சசிகலா விஸ்வநாதன்


எளிமையான கேள்விகள் எழும்ப;

பதில் அளிப்பது சிக்கலாகிறது.


ஒரு வார்த்தை பதில்கள்

இன்னமும் கடினம்! 

ஆம்; இல்லை!

வேண்டும்; வேண்டாம்!  

சரியா; தவறா?

மெய்யான பொய்யா?




எதிர்பாரா நேரத்தில் 

எதிர்பாரா நோக்கில்;

ஒற்றைச் சொல்

பதிலை நோக்கி

கேட்கப்படும் கேள்விகள் 

நம்மை நகர்த்த

நாம் குழம்புகிறோம்!

சிந்தனையில் மயக்கமோ,   

தயக்கமோ இல்லாததினால் 

அல்ல;

தெளிந்த மனம் வினவுகிறது;


இப்போது எடுக்கும்

முடிவு;

சரியா; தவறா?


(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில்  இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன். எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்;  வானமே எல்லை; கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு  கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)