எளிமையின் முரண்
- சசிகலா விஸ்வநாதன்
எளிமையான கேள்விகள் எழும்ப;
பதில் அளிப்பது சிக்கலாகிறது.
ஒரு வார்த்தை பதில்கள்
இன்னமும் கடினம்!
ஆம்; இல்லை!
வேண்டும்; வேண்டாம்!
சரியா; தவறா?
மெய்யான பொய்யா?
எதிர்பாரா நேரத்தில்
எதிர்பாரா நோக்கில்;
ஒற்றைச் சொல்
பதிலை நோக்கி
கேட்கப்படும் கேள்விகள்
நம்மை நகர்த்த
நாம் குழம்புகிறோம்!
சிந்தனையில் மயக்கமோ,
தெளிந்த மனம் வினவுகிறது;
இப்போது எடுக்கும்
முடிவு;
சரியா; தவறா?
(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில் இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன். எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்; வானமே எல்லை; கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)