உயிரெழுத்தில் உறவோசை!

Su.tha Arivalagan
Jul 07, 2026,10:26 AM IST

- செ. சாந்தி சின்னத்தம்பி


அ ன்பு எனும் கன்னலே...

ஆ சை வாழ்வின்மின்னலே..

இ லவமாய் ஆகும் இதயமே..

ஈ தலால் பெருகும் காதலே...

உ ன்னில் நானென மாறுமே...

ஊ ரில் அலர்  எழினும் நிலைக்குமே....




எ து எதிர்த்தாலும்தளிர்க்குமே...

ஏ னிந்த மனநிலை என நினைக்குமே...

ஐ ந்து நிமிடப் பிரிவும்சலிக்குமே....

ஒ ன்றாய் இணையத்துடிக்குமே....*


ஓ டிடவும் மனமும்தவிக்குமே....

ஒள டதம் இதற்கு அன்பே ஆகுமே....

 

(செ.சாந்தி சின்னத்தம்பி, அரசுப் பள்ளி தமிழாசிரியர்(ஓய்வு) மதுரை. சேலம் , பாரதியார் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் பணிபுரிந்துள்ளேன். (2 ஆண்டுகள்) ஆர்வம்: கவிதை, இசை,பாடல், நாடகம் புனைதல்.

வெளியிட்ட கவிதை நூல்கள்: 2. 1. விழி மூடி யோசித்தால் 2. மௌனமும் பழகிடு. தொகுப்பு நூல்கள். 4.  சென்னையில் நடந்த நேரடி கவிதை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றது பெருமை)