மனதில் உறுதி வேண்டும்.. நினைவு நல்லது வேண்டும்!

Jul 06, 2026,03:02 PM IST

- பன்முகக் கவிஞர் க. முருகேஸ்வரி


மனதில் உறுதி வேண்டும்

நினைவு நல்லது வேண்டும்

நினைத்ததை எண்ணத்தில்

திண்ணமாக்க வேண்டும்


எண்ணம் ஈடேற

வலிமையுடன் முயற்சி செய்ய வேண்டும்

தடைக்கல் வந்தால்

நெம்பி விட்டு

படிக்கல்லாக்க வேண்டும்




ஏமாற்றம் கிட்டினால்

ஏணியாக்கி உயரம் எட்ட வேண்டும்

துரோகத்தை தூர் வாரி

துணிச்சலாக்க வேண்டும்


தடை வரினும்

முயற்சியைக் கைவிடாமல்

உறுதியுடன் இருக்க வேண்டும்


எண்ணமதை எஃகாக்கி

அது வண்ணமாக மாற

போராட வேண்டும்


(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார். சிங்கப்பூர் பொழில் பண்பலையில் கவிதைகள் எழுதுகிறார்.. சிங்கப்பெண், அருந்தமிழ் தாரகை விருதுகள் பெற்றுள்ளார்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவ வழக்கில் நாளை விசாரணை : ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோருக்கு தடை விதிக்க திமுக கோரிக்கை

news

ஜூலை 21ம் தேதி சென்னை வருகிறார் ராகுல்காந்தி: முதல்வர் விஜய்யை சந்திப்பாரா?

news

தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தர வேண்டும்: அண்ணாமலை பரபரப்பு பேச்சு!

news

மதிமுக.,விடம் திமுக குதிரை பேரம் நடத்தியது: வைகோ பகீர் குற்றச்சாட்டு

news

செந்தில் பாலாஜி, அசோக்குமாரின் முன்ஜாமீன் வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம்!

news

ரேஸ் வேண்டாம்...நடிக்க வாங்க அஜித் - மன்சூர் அலிகான் வேண்டுகோள்

news

மனதில் உறுதி வேண்டும்.. நினைவு நல்லது வேண்டும்!

news

அமைச்சர் ஆனந்துடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீர் சந்திப்பு

news

அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் தினசரி ரூ.6-8 லட்சம் திருட்டா?

அதிகம் பார்க்கும் செய்திகள்