- அ. தாமஸ்
அனைத்திற்கும் பயப்பட்டு வாழ்வதை விட அனைவருக்கும் பயன்பட வாழ்தலே சிறப்பு. அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவது நம்மை ஆற்றுப்படுத்தும்; அனைத்திற்கும் அஞ்சுவது நம் ஏற்றத்தையே தடுக்கும். எனவே தகுதியானவற்றிற்கு அஞ்சுவோம் தகுதியோடு அனைத்தையும் மிஞ்சுவோம்.
அனைத்திலும் நேர்மையையே கைக்கொண்டால் யாருக்கும் அஞ்ச வேண்டியதும் இல்லை எதற்கும் கெஞ்ச வேண்டியதும் இல்லை. நேர்மை நமதானால் நாமும் தலைக்கணம் அறவே அகற்றி தன்முனைப்பு ஒன்றையே ஏற்று தலை நிமிர்ந்து நிற்கலாம் எங்கும் எதிலும்.

பயம் பிறர் நம்மை அடிமைப்படுத்த பயன்படுத்தும் ஆகச் சிறந்த ஆயுதம். இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டியே பயத்தால் நம்மைப் பலவீனப்படுத்துகிறார்கள். எனவே பயம் களைவோம் பயம் இல்லா புது யுகம் புனைவோம்.
நாம் கடமையில் கருத்தாய் இருந்தால் கடவுளும் நமக்கு உருத்தாய் இருப்பார். எனவே கடமையை கருத்தேற்றி இறை ஒன்றுக்கே அஞ்சுவோம். அஞ்சுபவனிடம் அதிகாரத்தைக் காட்டும் உலகம் துணிபவனிடத்தே பணிகிறது. எனவே பண்பாளரிடம் பணிவோம் பகையாளனிடமே துணிவோம்; இறை ஒன்றிலே என்றும் இணைவோம்.
(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)
மனதில் உறுதி வேண்டும்.. நினைவு நல்லது வேண்டும்!
ஜூலை 21ம் தேதி சென்னை வருகிறார் ராகுல்காந்தி: முதல்வர் விஜய்யை சந்திப்பாரா?
தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தர வேண்டும்: அண்ணாமலை பரபரப்பு பேச்சு!
மதிமுக.,விடம் திமுக குதிரை பேரம் நடத்தியது: வைகோ பகீர் குற்றச்சாட்டு
அமைச்சர் ஆனந்துடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீர் சந்திப்பு
அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் தினசரி ரூ.6-8 லட்சம் திருட்டா?
சிந்தனைச் சிதறல்.. அனைவருக்கும் பயன்பட வாழ்தலே சிறப்பு!
சம்மன் அனுப்பிய போலீஸ்...ஆஜராகாத செந்தில் பாலாஜி...அடுத்து என்ன?
தனிமை துறந்தவன்!
{{comments.comment}}