- அ. தாமஸ்
ஒருவர் விதையிட்டு வளர்க்கையில் துளிராத விதை வேறு ஒருவர் வெறுமனே நீர் வார்க்கையில் துளிர்கிறது என்பதற்காக துளிர்விட்ட நேரத்தில் நீரிட்டவருக்கு மட்டுமே அம்மகிழ்வினைக் கொண்டாடும் உரிமை உரியதன்று. மாறாக அம் மகிழ்ச்சியில் பெரும்பங்கு விதையிட்டு வளர்த்தவருக்கே உள்ளது என்பதை பல நேரங்களில் ஏற்க மறுக்கிறோம். துளிர்விட்ட நேரத்தில் நீர் வார்த்தவரையே அனைத்திற்கும் காரணம் என்று தூக்கிப் பிடிக்கிறோம்.
பிறரின் உழைப்பிற்கு உரிமை கொண்டாடுவது அவர் உமிழ்ந்த உணவை உண்பதை விட மோசமானது. எனவே நமது உழைப்பின் மதிப்பை உரிமையோடு ஏற்று பிறர் உழைப்பின் மதிப்பை உத்தரவாதமேயின்றி மறுத்து அதை உரியவரிடம் சேர்த்தாலே இங்கு பலரின் வெற்றி அடையாளப்படுத்தப்பட்டிருக்கும்.

தேவை உணர்ந்து மரம் வைப்பவனை மதி கெட்டவன் எனும் உலகம்தான் வைத்த மரத்தை வேர் அறுத்து விலை பேசுபவனை மதி நுட்ப வாதி என்கிறது. இந்நிலை தொடர்வதால் தான் மரம் இழந்த மானுடம் நீருக்கும் காற்றுக்கும் நிழலுக்கும் கூட இறந்து நிற்கிறது பெரு வணிகரிடம்.
வசதிகள் கிடைக்கும் பொழுது வளர்ப்பதை விட ஆபத்தான நேரத்தில் அழியாமல் காப்பதே அனைத்திலும் உயர்வானது. வசதிகள் கிடைக்கையில் தானாய் வளர்வதைக் கூட தான் வளர்த்தேன் என்று பெருமை பேசுபவரை உயர்த்திப் பிடிக்கும் உலகம் ஆபத்துக் காலத்தில் தனி ஒருவனாய் தாங்கிப் பிடித்தவனை தகுதியற்றவன் என தகுதி நீக்கம் செய்கிறது. எனவே தகுதியானதை தகுதியான இடத்தில் சேர்ப்போம். தகுதியானவரை அவர் தகுதி உணர்ந்து ஏற்போம்.
(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)
சுதந்திர தாகம் தணிந்து... சுதந்திர மோகம் எழுந்தது ஏனோ???
தீரமும் வீரமும் செறிந்த.. விடுதலை முழக்கம்.. சுதந்திரக் காற்றை சுவாசிக்க இந்தியா கடந்து வந்த பாதை!
முதல்வர் விஜய்யின் முதல் சுதந்திர தினம்.. கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடியேற்றினார்
அறிவுஜீவி நக்சலைட்டுகளால் நாட்டுக்கு ஆபத்து.. களையெடுத்து அகற்ற வேண்டும்.. பிரதமர் மோடி பேச்சு
சாக்லெட்டுக்கு பதில் கடலை மிட்டாய் – தேவகோட்டை பள்ளியில் வித்தியாசமான சுதந்திர தின விழா!
போர் இல்லா உலகைத் தேடும் புவி மகளோ பாரதம்!
இன்றெனக்கு விடுதலை கிடைத்தது!
சுதந்திரம் எனும் ஒளி
சுதந்திரம் என்ன சும்மாவா கிடைத்தது?
{{comments.comment}}