விரல் (ஸ்பரிசம்)

Su.tha Arivalagan
Oct 21, 2025,04:08 PM IST

- தா சிலம்பரசி


தோள் மீது தென்றலாய்... 

தாய் மீது மன்றலாய்...

அன்பை அச்சிட்டு...

பண்பை வித்திட்டு... 

கண்ணீரை துடைக்கும்

கருணையின் தாய்...

கவிதை எழுதும்

சிந்தையின் தூதர்...விரல்


அன்பின் நடனத்தில்...

நுண்ணிய உரைபா...

விரல் ஒன்று வாசிக்க..

உணர்வுள்ள ஓவியம்

மவுன மனதின்

புத்தகத்தை 

தொட்டவுடன் உருகுகிறது...

நினைவுகளை பருகுகிறது...

நெருப்பு நீர்ப்பாய்ச்ச

ஒரு புன்னகை 

பேசும் 

கைக்குலுக்கலில் விரல்கள்...




வேறாகி போகும்

உறவுகள் கூட...

விருந்தோம்பல் பண்பில் 

உணவு பரிமாற...

பிரிந்து  போகும்

பந்தங்கள் கூட

விரலின் வழியே

விசாலமாக...


நட்பு கமழும்

நறுமணத்தோடு..

விரல் தொடுதலில்

உயிர் பெறும்...


(தா. சிலம்பரசி வேலூர் மாவட்டம் மேல்மணவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக 13 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஆன்லைன் வகுப்புகள், செயல் ஆராய்ச்சி, 3D மற்றும் AI தொழில்நுட்பம், விளையாட்டு வழிக் கற்றல், மின்னணு மதிப்பீடு போன்ற நவீன முயற்சிகளின் மூலம் தொடக்க நிலை மாணவர்களை ஆர்வமுடன் கற்றலில் ஈடுபடுத்தி, தமிழ்நாடு அரசின் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் தொழில்நுட்பக் கல்வி முன்னேற்றத்தில் சிறப்பான பங்களிப்பு செய்துள்ளார். தமிழின் மீது கொண்ட ஆர்வத்தால் தமிழ்நாடு அரசின் ஊஞ்சல், தேன் சிட்டு, கனவு ஆசிரியர் இதழ்களில் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு, மாணவர்களின் கதை, கவிதை, ஓவியம், கட்டுரை போன்ற படைப்பாற்றல் திறன்களை வளர்த்துள்ளார். இவரின் சிறந்த கல்விச் சேவையைப் பாராட்டி, தமிழ்நாடு அரசு 2025 ஆம் ஆண்டு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கி கௌரவித்துள்ளது)