சிந்தனைச் சிதறல்.. தொடங்குவதற்கு முன்பு பலமுறை யோசியுங்கள்!
- அ.தாமஸ்
ஒன்றை துவங்குவதற்கு முன் பலமுறை யோசித்து துவங்குவதும் துவங்கியதை முறையாய் முடிக்க முனைவதும் முறையே . ஆனால் தவறான ஒன்றைத் துவங்கி விட்டு அது தவறு என அறிந்தும் துவங்கி விட்டோமே என்பதற்காக தவறாகக் கூட முடித்து விடலாம் என்று நினைப்பது அனைத்திலும் ஆபத்தானது. இத்தகு நிலையில் தவறானதைத் தொடர்வதைவிட தவறென உணர்ந்ததை அந்நிலையிலேயே துண்டிக்கத் துணிவதே உயர்வானது.
எந்த ஒன்றையும் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி! செயல்படுத்திவிட்டு சிந்தித்தால் அனுபவம்! சிந்திக்காமலே தொடங்குவதும் தொடர்வதுமே அவமானம்.
தன் மதிப்பு என்பது பிறரின் உணர்வுகளை சிதைத்து உருவாக்கப்படுவதல்ல;மாறாக அவர்களை மதித்து அவர்களின் உணர்விலும் உறவிலும் ஒன்றி அவர் நிலையில் உயர்வதேயன்றி வேறில்லை.
(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)