சூரத் தேங்காய் விநாயகர்!
- பாரதிராஜன்
நீறில்லா நெற்றி பாழ் , கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம். இது ஊரறிந்த பழமொழி.
அரச மரத்தடியில் கண்டிப்பாக விநாயகர் கோயில் இருக்கும் , கிராமங்களிலும் நகரங்களிலும் பார்க்கலாம். விநாயகருக்குத்தான் எத்தனை பெயர்கள். ஆதி விநாயகர், வீர கணபதி , வலம்புரி விநாயகர்,ஜெய கணேசர்,ஜெய விக்நேசர் , இப்படி பல பெயர்களில் பக்தர்களை காப்பதில் அவருக்கு இணை யாருமில்லை.
வட சென்னையில் அம்பத்தூரில் வெங்கடாபுரம் பகுதியில் பழைய அஞ்சலகத் தெருவில் உள்ள வரசித்தி விநாயகர் சுமார் 60 ஆண்டுகளுக்கு மேல் பக்தர்கள் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி வருபவர். இவர் தான் சூரைத் தேங்காய் பிரியர்.
மாதாமாதம் வரும் சங்கடஹர சதுர்த்தி கற்கும் குறைந்த பட்சம் 108 தேங்காய்கள், தினசரி 10 தேங்காய் கள் வரை உடைக்கப்படும். வரப்பிரசாதி விநாயகர், மறைந்த ஜோதிடர் சிவராம் ஜி அவர்களால் கிழவன் என்றும் தற்போது
உள்ள குருக்களால் எம்.டி என்றும் அன்புடன் அழைக்கப்படுபவர்.
(எழுத்தாளர் பாரதிராஜனின் இயற்பெயர் ரங்கராஜன் , பாரதியார் பாடல்கள் மேல் உள்ள காதலால் பாரதிராஜன் என்கிற புனைப்பெயரில் கதை கட்டுரை மற்றும் கவிதை எழுதி வருகிறார். சென்னை அம்பத்தூரில் வசித்து வருகிறார்)