சிந்திப்போம்.. மனிதன் ஏன் இன்னொரு மனிதனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க வேண்டும்?

Su.tha Arivalagan
Apr 13, 2026,12:33 PM IST

- டி. கலைமணி

 

மனிதன் ஏன் இன்னொரு மனிதனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க வேண்டும்..?? 


ஒரு மனிதன் எப்போது அச்சம் கொள்கிறான்?

இன்னொரு மனிதனின் இறந்த சவத்தை


பார்க்கும் போது தானும்

நடுங்குகிறான்.


உலகின் வேறு எதுவும் மனிதனை இத்தனை

அசைத்துப் பார்ப்பதில்லை


நமக்கு சோறு ஊட்டிய அன்னை, நம்மை தோளில் சுமந்த தந்தை, நம் தூக்கி வளர்த்த பிள்ளை, நம் இன்பதுன்பங்களை பகிர்ந்த வாழ்க்கை துணை.  




நம்முடன் சுற்றிதிரிந்த நன்பன். இவர்களின் மரணம் நம்மை புரட்டி எடுக்கும்


ஒரு நாள் நமக்கும் இருக்கிறது

என்ற எண்ணமே நம்மை ஆட்டிப் பார்க்கிறது


மனசுக்கு நெருங்கியவரை குழிக்குள் இறக்கி மண்ணிட்டு மூடும் போது வரும் வெறுமை...


நாம் தலையில் சேர்த்து

னவத்திருக்கும்

புகழ் , 

ஈகோ, 

அகந்தை,

கர்வத்தையும்

சேர்த்து மண்ணோடு மூடிவிடும்...


ஒரு மரணத்தை காணும் போது மனம் இரங்க வேண்டும்


மரணம் எனக்கும்....!


(சென்னையைச் சேர்ந்த டி. கலைமணி, பக்தி, தத்துவம் என பல் சுவை பாடல்கள், கவிதைகள் எழுதுவதில் கை தேர்ந்தவர்