சிந்தனை.. கணவன் சொல்லை மீறியதன் விளைவு : தாட்சாயிணி!

Su.tha Arivalagan
Aug 11, 2026,03:33 PM IST

- டி. கலைமணி


இந்த உலகிற்கு நிகர் அன்னையும் தந்தையும் என தெரிவித்தவர்: விநாயகர்.


ஒருவர் சிரசினை மற்றொருவருக்கு பொருத்தும் இக்கால விஞ்ஞான முயற்சியின் ஆரம்பம்: விநாயகர்.


அக்கால அணுகுண்டு: பிரம்மாஸ்திரம்


கலப்பு திருமணம்: முருகன்.


அன்றே பெண்ணுக்கு சம உரிமை: அர்த்தநாரீஸ்வரர்.

 

கணவன் சொல்லை மீறியதன் விளைவு : தாட்சாயிணி


எல்லை தாண்டியதன் விளைவு : சீதா


கடவுளுக்கு பக்தியின் மிகுதியில் எச்சில் பழங்களை தந்தவர்: சபரி


தான் அணிந்த மாலையை தந்தவர்: ஆண்டாள். 


அறுசுவை அற்ற உணவை அளித்தவர் : விதுரர்




அதையும் விரும்பி உண்டவர்: பார்த்த அசுரரி


ஓர் சத்ரியன் சாமியார் ஆகலாம் : விஸ்வாமித்திரர். 


ஓர் பிராமணன் ஆயுதம் ஏந்தி போர்க்களம்  புகலாம்: பிரசுராமர்.


தந்தை கூறியதால் ஏன் என்று மறுகேள்வி கேட்காமல் தாயின் தலையைக் கொய்தவர் : பரசுராமர்


ஓர் பட்டியலினத்தவர் மிகச் சிறந்த நாயன்மார் ஆகலாம்: நந்தனார்


ஓர் வேடுவனும் நாயன்மார் ஆகலாம்: கண்ணப்ப நாயனார்


ஒரு திருடனும் இதிகாசம் எழுதலாம்: வால்மீகி


கொடுத்த வாக்கை காப்பாற்ற இறுதிவரை பிரம்மச்சரியம்: பீஷ்மர். 


அடுத்தவர் மனைவியின் மீது ஆசை கொண்டால் அது விலங்கானாலும் மனிதராணாலும், இராட்சனாணாலும் ஏன் தேவாதி தேவரே ஆனாலும் தண்டனை உண்டு: வாலி, கீசகன், இராவணன், இந்திரன்.


(சென்னையைச் சேர்ந்த டி. கலைமணி பக்தி, தத்துவம் என பல் சுவை பாடல்கள், கவிதைகள் எழுதுவதில் கை தேர்ந்தவர்)