- அழகிய சிங்கர்
(1)
பொன்னார் மேனியனை, மின்னார் செஞ்சடையானை,
மாதொரு பாகத்தானை,
மிளிர் கொன்றையானை,
பணிந்து பகர்வீர்;மனதில் இருத்தி!
சிவனே! போற்றி! போற்றி!
(2)
அடைக்கலம் காத்தானை அடி பணிவீர்!
ஆடலரசன் ஆட்டம்
காண்பீர்! மதுரையம்பதியில்;
அடைவார்க்கமுதனை, அமுதீசனை,
ஆவுடையானைத் தொழுவீர்!
சிவனே! போற்றி! போற்றி!
(3)
சோம சுந்தரக் கடவுளை நினையாமல்,
சோணாசலனை நித்தமும் நீ நினையாமல்,
வீணான நாட்களென வருந்தியே,சரணடை.
சிவனே! போற்றி! போற்றி!

(4)
முன்னைப் பழமைக்கும் பழையதான அவனே;
பின்னைப் புதுமைக்கும் புதிய வனும் அவனே!
ஆதி அந்தமில்லா அகண்டனை ; போற்றுக!
சிவனே! போற்றி! போற்றி!
(5)
சுந்தரனுக்கு நண்பனாய்,
அப்பருக்குத் தலைவனாய்
சம்பந்தனுக்கு தகப்பனாய்,
மாணிக்கவாசகனுக்கு சற்குருவாய்,
அனைத்துயிரிலும் உறையொரு இறைவனைப் போற்றுக!
சிவனே! போற்றி ! போற்றி!
LPG கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர் கவனத்திற்கு: e-KYC சரிபார்ப்பு ஆகஸ்ட் 15 வரை அவகாசம்
சிந்தனை.. கணவன் சொல்லை மீறியதன் விளைவு : தாட்சாயிணி!
தமிழகத்தில் ஆகஸ்ட் 17 வரை மழைக்கு வாய்ப்பு...சென்னையிலும் மழை தொடரும்
சிவனே! போற்றி! போற்றி.. அழகிய சிங்கரின் என்பா
சிந்தனைச் சிதறல்.. உரிமையென உணர்ந்து உணர்வோடு கொண்டாடுவோம்!
அமைதியாய் இருக்கும் புயல்!
பரம ஏழை!
பள்ளிப் பயண வழியில்!
ஐம்பதைத் தாண்டியும் ஆழ் மனதின் ஓரத்தில்!
{{comments.comment}}