கூந்தலில் அலர்!

Su.tha Arivalagan
Feb 13, 2026,03:25 PM IST

- ரதி தேவி


நறுமணம் கமழும் 

உன் கூந்தலுக்கு 

மிகை கூட்டுகிறது

பூ முடித்து வைத்த அலர்....


என் மனதை 

கொள்ளைக்

கொள்கிறது 

உந்தன் கூந்தலில் 

சூடிய அலரின் மணமே ...




என் நெஞ்சத்தையே

இளைப்பாற செய்கின்றாய்

மங்கையே நீ சூடிய

முல்லை மலராலே ......


என்னருகில் நெருங்கும் போது 

உந்தன் வெட்கத்தால் 

இதழ்களை மூடிக் 

கொள்கிறது 

நீ சூடிய 

விரிந்த தாமரை அலரே....


மங்கையே 

உன்னை போலவே நறுமணம் வீசுகிறது 

நீ சூடிய 

வாடாமலரே....!


அலரால் சூடாத

மயிலிறகு ஒத்தான

கூந்தலே சொல்கிறது 

வாடிய உந்தன் மனதை .....


பூ என்றாலே

மென்மை 

மென்மையின்

அடையாளம் பெண்மை.....

பெண்மைக்கு அழகே

அலரே....!