- கவிதா அறிவழகன்
புதியதாய்த் துளிர்த்த மென் சருமம்,
காலைப்பனியும் கனவுத் தென்றலும் போல...
கனவுகளுடன் ஓடித் தேய்ந்த முதிர்ந்த சருமம்,
மலரின் சிரிப்பையும், முட்களின் வலியையும் சுமந்தபடி.
தசாப்தங்கள் பல கடந்த அந்த தேகமானது,
அமைதியான ஒரு பழைய பாடலைப் பாடுகிறது...
ஒரு கை இளமை, மறு கை முதுமை,
வாழ்வின் இரு துருவங்கள் இங்கே கவிதையாய் சங்கமமாகிறது.

மேடுபள்ளங்கள் நிறைந்த வாழ்க்கைப் பாதையானது,
ஏற்ற இறக்கங்களால் பக்குவப்பட்ட கதைகள் பல பேசியது...
நடுங்கும் கைகளில் வரைந்த வாழ்க்கைச் சித்திரமானது,
அந்திப்பொழுதில் உருவான ஒரு அழகிய பெருங்காவியம்.
பாதைகள் பிரியும் சந்தியில் நின்றாலும்,
நிதானம் காக்கட்டும் நிமிர்ந்த தலையுடன்...
இந்த ஒரு சிறு பயணம் நமக்கானது மட்டுமே,
இதயத்தையும் ஆன்மாவையும் போற்றி வளர்ப்போம்.....
தோற்றம் முதிர்ந்தாலும், விவேகமான எண்ணங்களால்
என்றும் இளமையுடன் வாழ்வோம்.
(Kavitha Arivalagan, Creative Writers, Dharmapuri)
திமுகவிடம் தாலி கட்டிய மனைவி போல் தான் உள்ளனர் கூட்டணி கட்சிகள்: செல்லூர் ராஜூ விமர்சனம்!
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..வருகிற 15ம் தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி:வானிலை மையம்
சேலம் வருகிறார் விஜய்.. நாளை நிர்வாகிகள் சந்திப்பு.. 4,998 பேருக்கு மட்டுமே அனுமதி!
சத்துணவு ஊழியர்கள் போராட்டம்: நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் நயினார் நாகேந்திரன்
கல்யாணம் காது குத்தா.. சுப நிகழ்ச்சிகளுக்கு இனி அரசு பேருந்து உங்கள் வாசலில்!
ஒரு சிறு பயணம்.. நிறைவாக கடப்போம்.. A Short Journey
என்றும் இளமையுடன்...:!
எது எப்படி இருப்பினும்.. நீ வேண்டும்.. I really need you!
மாபெரும் சொத்து.. கல்வி.. Education – The Greatest Wealth
{{comments.comment}}