- கவிதா அறிவழகன்
புதியதாய்த் துளிர்த்த மென் சருமம்,
காலைப்பனியும் கனவுத் தென்றலும் போல...
கனவுகளுடன் ஓடித் தேய்ந்த முதிர்ந்த சருமம்,
மலரின் சிரிப்பையும், முட்களின் வலியையும் சுமந்தபடி.
தசாப்தங்கள் பல கடந்த அந்த தேகமானது,
அமைதியான ஒரு பழைய பாடலைப் பாடுகிறது...
ஒரு கை இளமை, மறு கை முதுமை,
வாழ்வின் இரு துருவங்கள் இங்கே கவிதையாய் சங்கமமாகிறது.

மேடுபள்ளங்கள் நிறைந்த வாழ்க்கைப் பாதையானது,
ஏற்ற இறக்கங்களால் பக்குவப்பட்ட கதைகள் பல பேசியது...
நடுங்கும் கைகளில் வரைந்த வாழ்க்கைச் சித்திரமானது,
அந்திப்பொழுதில் உருவான ஒரு அழகிய பெருங்காவியம்.
பாதைகள் பிரியும் சந்தியில் நின்றாலும்,
நிதானம் காக்கட்டும் நிமிர்ந்த தலையுடன்...
இந்த ஒரு சிறு பயணம் நமக்கானது மட்டுமே,
இதயத்தையும் ஆன்மாவையும் போற்றி வளர்ப்போம்.....
தோற்றம் முதிர்ந்தாலும், விவேகமான எண்ணங்களால்
என்றும் இளமையுடன் வாழ்வோம்.
(Kavitha Arivalagan, Creative Writers, Dharmapuri)
சென்னை சூப்பர் கிங்ஸை.. 13 ஓவர்களிலேயே நசுக்கி எடுத்து.. பெரும் வெற்றியைத் தட்டிய ராஜஸ்தான்
ரூ.14.20 கோடி கார்த்திக் சர்மா.. பொசுக்கென்று ஜோலியை முடித்த ரூ. 30 லட்சம்!
Chennai Super Kings New Record: தோனி, ரெய்னா இல்லாமல்... 17 ஆண்டுகளில் இது முதல் முறை!
CSK in Trouble: அடுத்தடுத்து விழும் விக்கெட்டுகள்.. கடும் அப்செட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள
எம்.பியாக இருக்கும் திருமாவளவன்.. எம்.எல்.ஏவாக முடிவெடுத்தது ஏன்.. உற்று நோக்கும் திமுக!
திமுக விரைவில் விடைபெறப்போகிறது - கொளத்தூர் தொகுதியில் விஜய் பிரச்சாரம்
தர்மபுரியில் செளமியா.. முதல் முறையாக சட்டசபைத் தேர்தல் களத்தில்.. பெரம்பூரில் திலகபாமா!
தமிழகத்தில் பிரதமர் மோடி சூறாவளிப் பிரச்சாரம்.. சென்னையில் ஏப். 4ல் பிரம்மாண்ட ரோடு ஷோ!
போர்ச் சூழலை குழந்தைகளுக்கு எப்படி விளக்குவது? – பெற்றோருக்கான 15 வழிகாட்டுதல்கள்
{{comments.comment}}