என்றும் இளமையுடன்...:!

Feb 12, 2026,03:34 PM IST

- கவிதா அறிவழகன்

     

புதியதாய்த் துளிர்த்த மென் சருமம்,

காலைப்பனியும் கனவுத் தென்றலும் போல...

கனவுகளுடன் ஓடித் தேய்ந்த முதிர்ந்த சருமம்,

மலரின் சிரிப்பையும், முட்களின் வலியையும் சுமந்தபடி.


தசாப்தங்கள் பல கடந்த அந்த தேகமானது,

அமைதியான ஒரு பழைய பாடலைப் பாடுகிறது...

ஒரு கை இளமை, மறு கை முதுமை,

வாழ்வின் இரு துருவங்கள் இங்கே கவிதையாய் சங்கமமாகிறது.




மேடுபள்ளங்கள் நிறைந்த வாழ்க்கைப் பாதையானது,

ஏற்ற இறக்கங்களால் பக்குவப்பட்ட கதைகள் பல பேசியது...

நடுங்கும் கைகளில் வரைந்த வாழ்க்கைச் சித்திரமானது,

அந்திப்பொழுதில் உருவான ஒரு அழகிய பெருங்காவியம்.


பாதைகள் பிரியும் சந்தியில் நின்றாலும்,

நிதானம் காக்கட்டும் நிமிர்ந்த தலையுடன்...

இந்த ஒரு சிறு பயணம் நமக்கானது மட்டுமே,

இதயத்தையும் ஆன்மாவையும் போற்றி வளர்ப்போம்.....

தோற்றம் முதிர்ந்தாலும், விவேகமான எண்ணங்களால்

என்றும் இளமையுடன் வாழ்வோம்.


(Kavitha Arivalagan, Creative Writers, Dharmapuri)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எம்எல்ஏ.க்களுக்கு கார்.. விவாதத்தில் சிக்கிய ஆபர்.. முதல்வர் விஜய்யின் அறிவிப்பு சரியா?

news

விஜய்யிடம் சீட் கேட்ட அந்த பிரபல டைரக்டர் இவரா? ஹாட் டாக்கான புஸ்ஸி ஆனந்த் பேச்சு

news

நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் எவ்வளவோ இருக்க.. எம்எல்ஏக்களுக்கு கார் எதுக்கு?.. சீமான்

news

உத்தரப் பிரதேச நீதிபதியிடமிருந்து 100 கொலை வழக்குகள் அதிரடி மாற்றம்.. அதிர வைக்கும் காரணம்!

news

செட்டிநாட்டு கிச்சன்.. இன்றைய ருசியான ரெசிபி.. அசத்தலான மட்டன் கிரேவி!

news

பாத்து பாத்து ஆசை அள்ள பரவசத்தில் மீசை துள்ள!

news

Varalakshmi Nonbu: வரலட்சுமி நோன்பு.. ஆகஸ்ட் 21ம் தேதியா இல்லை 28ஆ?

news

பாம்பன் சுவாமிகளே பக்தியின் பெருங்கடலே!

news

சரியான முடிவு

அதிகம் பார்க்கும் செய்திகள்