வெற்றியின் ஒளி!

Su.tha Arivalagan
Dec 29, 2025,10:22 AM IST

கடமையை செய்பவனுக்கு 

கடமை இருந்து கொண்டே இருக்கும் 

கவலை படுகிறவனுக்கு 

கவலை இருந்து கொண்டே இருக்கும் 

நம் முகத்தில் புன்னகை சேர்ந்தாலே 

அழகும் சேரும்.

நாமும் சிரித்து மற்றவர்களையும் 

சிரிக்க வைப்போம் 




மாறியவர்களை என்றும் 

எதிர்பார்கார்க்காதீர்கள் 

வீட்டு சுவற்றில் உள்ள மூதாதையரின் படத்தை பாருங்கள் 

சற்று சிந்தித்துப் பாருங்கள் 

அவர்கள் எதை எடுத்துச் சென்றார்கள் 

சென்றபின் நம் தினசரி வேலைகளில்

எது நின்று போனது 

நாம் செய்யும் தவறு 

இல்லாததை தேடி 

இருப்பதை இழந்து விடுகிறோம் 

கடந்து போனதை பற்றி கவலைபடாமல் 

அதில் நன்மை இருந்தால் நீடித்திருக்கும் 

கடந்து பார்போம் என நினையுங்கள் 

எதையும் உங்களால் அடைய முடியும்


(J லீலாவதி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)