உன் இமைகளின் வழியே!

Su.tha Arivalagan
Jan 21, 2026,10:26 AM IST

-பா. பானுமதி


மாலை விரைவாய் 

வீடு திரும்புவேன் 

மனம் விரும்பும் இடத்திற்கு 

அழைத்துச் செல்வேன் 

என்று சொல்லிவிட்டு தான் சென்றேன்

ஆனால் 

என்றும் இல்லாதபடி இன்று எக்கச்சக்க வேலை

எல்லாம் முடித்து இரவு வீடு திரும்பிய பின் 

உன் இமைகளின் வழியே 

ரணமான இதயம் உணர்ந்தேன் 




என்ன செய்ய 

என் நிலை அப்படி

மன்னித்துவிடு மல்லிகை பந்தலே

உன்  மணம் பரப்பி 

என்  வேலையின் பளு குறைத்துவிடு

இனிமேல் இப்படி ஆகாது என்று சொல்வதற்கில்லை 

எப்படி ஆனாலும் எந்நிலை புரிந்து கொள் 

இதுவே சூழ்நிலை என தெளிந்து கொள் 

அப்போது தான் புயல் வீசாது 

தென்றல் வீசாவிட்டாலும் 

உண்மையை உரக்க சொல்ல முடியாவிட்டாலும் 

உள்ளத்திற்கு சொல்கிறேன் உணர்ந்து கொள்!