பேச்சின் வலிமை!

Jan 21, 2026,10:23 AM IST

- கவிஞர் க. முருகேஸ்வரி


தெளிவாகப் பேசு....

தேவையான இடங்களில் பேசு....

தேவையற்ற இடங்களில் 

வாயை மூடிப் பேசு....

அமைதியை விட

ஆழமான பேச்சு 

வேறு ஏதும் இல்லை.!!....

பேசத் தெரியும் என்றாலும்

பேசிக் கொண்டே இருக்காதே.....

கேட்பவர்க்கு எரிச்சலூட்டும்......




பிறரைப் பேச அனுமதி .....

அளந்து பேசு......

அடக்கமாய் பேசு......

பேச்சைக் குறை.....

புத்திசாலி என்று நினைத்து பிதற்றாதே

வார்த்தைகள் வலிக்கும்

நக்கலாய் பேசாதே

நாவடக்கி பேசு

நாவில் சுட்டால் ஆறாது

சுருங்கச் சொல்....

நறுக்கென்று பேசு....!


(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முண்டாசுக் கவிஞன் "பாரதிக்கு" கவிதாஞ்சலி!

news

இரைதேடும் பறவைகள்!

news

துலாபாரம்.. ஒரு நிமிடக் கதை (15)

news

Chettinadu Recipies: வாசக் கருவேப்பிலையே.. மணமணக்கும் கருவேப்பிலை குழம்பு!

news

போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

news

அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி

news

தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!

news

மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!

news

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

அதிகம் பார்க்கும் செய்திகள்