- செ. சாந்தி சின்னத்தம்பி
ஆராரோ...
ஆரிரரோ....
ஆராரோ... ஆரிரரோ....
சிங்காரத்தேனே தென்மதுர மானே
வந்தாடும் மீனே வாழ்வு தந்த கோனே
முல்லைப் பூத்தொட்டில் உண்டு
முத்துச்சரம் நீ உறங்க

மல்லிப்பூ தொட்டில் உண்டு மன்மதனே நீ உறங்க
அல்லிப் பூத்தொட்டில் உண்டு ஆரெழிலே நீ உறங்க
அத்தனையும் மாமன் தந்த சீராக கண்ணுறங்க...
யானை தந்தம் எடுத்து தேரு ஒன்னு செஞ்சு வெச்சேன்
புலியின் நெகமெடுத்து மாலை ஒன்னு கட்டி வச்சேன்
தங்கராசா மருளாத
வீரவாள் வாங்கி வச்சேன்....
கண்ணுறங்கு கண்ணுறங்கு காலம் வரும் கண்ணுறங்கு
கதை கேட்டு முடிக்கையிலே வீரமும் சேர்ந்திருக்கும்....
சிங்காரத்தேனே
தென்மதுரமானே
வந்தாடும்மீனே
வாழ்வு தந்த கோனே...
ஆராரோ.... ஆரிரரோ...
ஆராரோ ஆரிரரோ
(செ.சாந்தி சின்னத்தம்பி, அரசுப் பள்ளி தமிழாசிரியர்(ஓய்வு) மதுரை. சேலம் , பாரதியார் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் பணிபுரிந்துள்ளேன். (2 ஆண்டுகள்) ஆர்வம்: கவிதை, இசை,பாடல், நாடகம் புனைதல். வெளியிட்ட கவிதை நூல்கள்: 2. 1. விழி மூடி யோசித்தால் 2. மௌனமும் பழகிடு. தொகுப்பு நூல்கள். 4. சென்னையில் நடந்த நேரடி கவிதை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றது பெருமை)
போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி
தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!
மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!
தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!
தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!
{{comments.comment}}