-கவிதா அறிவழகன்
அமைதி
சத்தம் இல்லாமல் வந்தபோது....
சத்தங்கள் எல்லாம்
என்னை விட்டு விலகிய போது,
ஒரு ஆழமான நிசப்தம்
என் நெஞ்சுக்குள்
மெல்ல வந்து அமர்ந்தது.
எந்தக் கதையும் சொல்லாமல்,
எந்தக் கவிதையும் உரைக்காமல்,
எந்தக் கதவையும் தட்டாமல்,
அமைதி,
ஒரு ஆத்மத் தோழி போல
என் அருகில் வந்து உட்கார்ந்தது.

அந்த தோழி
வலிகளைப் பற்றி பேசவில்லை,
மனதின் பாரங்களை நினைவூட்டவில்லை,
அழியாத நினைவுகளை
தூண்டவும்
இல்லை.
அதற்கு மாறாக,
ஒரு புன்னகை மட்டும்
மௌனமாய் அங்கே
பூத்தது.
அப்போது தான் புரிந்தது---
அமைதி என்பது
வெற்றிக்குப் பின்
வருவது அல்ல,
தாங்கும் மனப்பக்குவம்
வந்த பின் மெல்ல கனிவது
அமைதி.
சத்தம் இல்லாமல்
வந்தபோது நான்
அதைத் தடுத்து நிறுத்தவில்லை,
ஏனெனில்,
அந்த அமைதியில் தான்,
நான் யாருக்கும் நிரூபிக்க வேண்டிய நிர்ப்பந்தங்கள் இல்லாமல்
இருந்தேன்.
(Kavitha Arivalagan, Creative writers, Dharmapuri)
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. மூர்த்தி நாயனார்
அழகு மயில்!
மதியொளி முகமோ!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}