அமைதி .. சத்தம் இல்லாமல் வந்தபோது...!

Jan 19, 2026,05:03 PM IST

-கவிதா அறிவழகன்


அமைதி 

சத்தம் இல்லாமல் வந்தபோது....

சத்தங்கள் எல்லாம்

என்னை விட்டு விலகிய போது,

ஒரு ஆழமான நிசப்தம்

என் நெஞ்சுக்குள்

மெல்ல வந்து அமர்ந்தது.


எந்தக் கதையும் சொல்லாமல்,

எந்தக் கவிதையும் உரைக்காமல்,

எந்தக் கதவையும் தட்டாமல்,

அமைதி,

ஒரு ஆத்மத் தோழி போல

என் அருகில் வந்து உட்கார்ந்தது.




அந்த தோழி

வலிகளைப் பற்றி பேசவில்லை,

மனதின் பாரங்களை நினைவூட்டவில்லை,

அழியாத நினைவுகளை

தூண்டவும்

இல்லை.


அதற்கு மாறாக,

ஒரு புன்னகை மட்டும்

மௌனமாய் அங்கே

பூத்தது.


அப்போது தான் புரிந்தது---

அமைதி என்பது

வெற்றிக்குப் பின்

வருவது அல்ல,

தாங்கும் மனப்பக்குவம்

வந்த பின் மெல்ல கனிவது

அமைதி.


சத்தம் இல்லாமல் 

வந்தபோது நான்

அதைத் தடுத்து நிறுத்தவில்லை,

ஏனெனில்,

அந்த அமைதியில் தான்,

நான் யாருக்கும் நிரூபிக்க வேண்டிய நிர்ப்பந்தங்கள் இல்லாமல்

முதன்முறையாக

'நான்' நானாகவே

இருந்தேன்.


(Kavitha Arivalagan, Creative writers, Dharmapuri)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கரூர் வழக்கு.. 2வது சிபிஐ விசாரணை முடிவுக்கு வந்தது.. புன்னகையுடன் வெளியேறிச் சென்ற விஜய்!

news

2026ம் ஆண்டின் முதல் சட்டசபைக் கூட்டம்.. நாளை கூடுகிறது.. ஆளுநர் உரையாற்றுவாரா?

news

அடுத்த திட்டம் என்ன?...ஆதரவாளர்களுடன் சசிகலா தீவிர ஆலோசனை

news

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜன30ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு.. இதுவரை 12.80 லட்சம் பேர் மனு

news

மீண்டும் மீண்டும் தள்ளிப் போகும் தெறி ரீ ரிலீஸ்...காரணம் இது தானா?

news

71 மாவட்டங்களுக்கும் தலைவர்கள்.. ஒரு வழியாக அறிவித்தது காங்கிரஸ்!

news

தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் வெள்ளி விலை... இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.1,360 உயர்வு

news

அமைதி .. சத்தம் இல்லாமல் வந்தபோது...!

news

சிவபெருமானின் முழு அருளை பெற இந்நன்நாளை தவற விடாதீர்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்