அமைதி .. சத்தம் இல்லாமல் வந்தபோது...!

Jan 19, 2026,05:03 PM IST

-கவிதா அறிவழகன்


அமைதி 

சத்தம் இல்லாமல் வந்தபோது....

சத்தங்கள் எல்லாம்

என்னை விட்டு விலகிய போது,

ஒரு ஆழமான நிசப்தம்

என் நெஞ்சுக்குள்

மெல்ல வந்து அமர்ந்தது.


எந்தக் கதையும் சொல்லாமல்,

எந்தக் கவிதையும் உரைக்காமல்,

எந்தக் கதவையும் தட்டாமல்,

அமைதி,

ஒரு ஆத்மத் தோழி போல

என் அருகில் வந்து உட்கார்ந்தது.




அந்த தோழி

வலிகளைப் பற்றி பேசவில்லை,

மனதின் பாரங்களை நினைவூட்டவில்லை,

அழியாத நினைவுகளை

தூண்டவும்

இல்லை.


அதற்கு மாறாக,

ஒரு புன்னகை மட்டும்

மௌனமாய் அங்கே

பூத்தது.


அப்போது தான் புரிந்தது---

அமைதி என்பது

வெற்றிக்குப் பின்

வருவது அல்ல,

தாங்கும் மனப்பக்குவம்

வந்த பின் மெல்ல கனிவது

அமைதி.


சத்தம் இல்லாமல் 

வந்தபோது நான்

அதைத் தடுத்து நிறுத்தவில்லை,

ஏனெனில்,

அந்த அமைதியில் தான்,

நான் யாருக்கும் நிரூபிக்க வேண்டிய நிர்ப்பந்தங்கள் இல்லாமல்

முதன்முறையாக

'நான்' நானாகவே

இருந்தேன்.


(Kavitha Arivalagan, Creative writers, Dharmapuri)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அறிவுக்கும் ஒரு திருக்கோவில் இருக்கு.. ஆழியாறு போனா இதை மறக்காதீங்க!

news

கோப்பையை ராகுல் டிராவிட், லட்சுமணுக்கு அர்ப்பணிக்கிறேன்.. கெளதம் கம்பீர் நெகிழ்ச்சி

news

தோல்விகள் பாடங்களைக் கற்பிக்கலாம்,.. ஆனால் வெற்றிகள் மட்டுமே வரலாற்றை எழுதும்!

news

India T20 World Cup Champion: அகமதாபாத்தில் புதிய வரலாறு.. 3வது டி 20 உலகக் கோப்பையை வென்றது இந்தியா

news

T20 Cricket World Cup Finals: அகமதாபாத்தை அதிர விட்ட இந்தியா.. அடுத்தடுத்து பல உலக சாதனைகள் காலி!

news

இந்திய பேட்டிங் வேகத்தை சீர்குலைத்த ஜிம்மி நீஷம்.. சுத்த மோசம்.. ஒரே ஓவரில் 3 விக்கெட்கள்!

news

ஹாட்ரிக் அரை சதம்.. நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் வித்தை காட்டிய சஞ்சு சாம்சன்!

news

பேச வேண்டிய நேரத்தில் பேட் பேசும்.. சுனில் கவாஸ்கரின் வாயை.. அதிரடியாக மூடிய அபிஷேக் சர்மா!

news

அபிஷேக் - சஞ்சு சாம்சன் அதிரிபுதிரி ஆட்டம்.. பாகிஸ்தான் உலக சாதனையை முறியடித்த இந்தியா!

அதிகம் பார்க்கும் செய்திகள்