-கவிதா அறிவழகன்
அமைதி
சத்தம் இல்லாமல் வந்தபோது....
சத்தங்கள் எல்லாம்
என்னை விட்டு விலகிய போது,
ஒரு ஆழமான நிசப்தம்
என் நெஞ்சுக்குள்
மெல்ல வந்து அமர்ந்தது.
எந்தக் கதையும் சொல்லாமல்,
எந்தக் கவிதையும் உரைக்காமல்,
எந்தக் கதவையும் தட்டாமல்,
அமைதி,
ஒரு ஆத்மத் தோழி போல
என் அருகில் வந்து உட்கார்ந்தது.

அந்த தோழி
வலிகளைப் பற்றி பேசவில்லை,
மனதின் பாரங்களை நினைவூட்டவில்லை,
அழியாத நினைவுகளை
தூண்டவும்
இல்லை.
அதற்கு மாறாக,
ஒரு புன்னகை மட்டும்
மௌனமாய் அங்கே
பூத்தது.
அப்போது தான் புரிந்தது---
அமைதி என்பது
வெற்றிக்குப் பின்
வருவது அல்ல,
தாங்கும் மனப்பக்குவம்
வந்த பின் மெல்ல கனிவது
அமைதி.
சத்தம் இல்லாமல்
வந்தபோது நான்
அதைத் தடுத்து நிறுத்தவில்லை,
ஏனெனில்,
அந்த அமைதியில் தான்,
நான் யாருக்கும் நிரூபிக்க வேண்டிய நிர்ப்பந்தங்கள் இல்லாமல்
இருந்தேன்.
(Kavitha Arivalagan, Creative writers, Dharmapuri)
முண்டாசுக் கவிஞன் "பாரதிக்கு" கவிதாஞ்சலி!
இரைதேடும் பறவைகள்!
துலாபாரம்.. ஒரு நிமிடக் கதை (15)
Chettinadu Recipies: வாசக் கருவேப்பிலையே.. மணமணக்கும் கருவேப்பிலை குழம்பு!
போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி
தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!
மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
{{comments.comment}}