-கவிதா அறிவழகன்
அமைதி
சத்தம் இல்லாமல் வந்தபோது....
சத்தங்கள் எல்லாம்
என்னை விட்டு விலகிய போது,
ஒரு ஆழமான நிசப்தம்
என் நெஞ்சுக்குள்
மெல்ல வந்து அமர்ந்தது.
எந்தக் கதையும் சொல்லாமல்,
எந்தக் கவிதையும் உரைக்காமல்,
எந்தக் கதவையும் தட்டாமல்,
அமைதி,
ஒரு ஆத்மத் தோழி போல
என் அருகில் வந்து உட்கார்ந்தது.

அந்த தோழி
வலிகளைப் பற்றி பேசவில்லை,
மனதின் பாரங்களை நினைவூட்டவில்லை,
அழியாத நினைவுகளை
தூண்டவும்
இல்லை.
அதற்கு மாறாக,
ஒரு புன்னகை மட்டும்
மௌனமாய் அங்கே
பூத்தது.
அப்போது தான் புரிந்தது---
அமைதி என்பது
வெற்றிக்குப் பின்
வருவது அல்ல,
தாங்கும் மனப்பக்குவம்
வந்த பின் மெல்ல கனிவது
அமைதி.
சத்தம் இல்லாமல்
வந்தபோது நான்
அதைத் தடுத்து நிறுத்தவில்லை,
ஏனெனில்,
அந்த அமைதியில் தான்,
நான் யாருக்கும் நிரூபிக்க வேண்டிய நிர்ப்பந்தங்கள் இல்லாமல்
இருந்தேன்.
(Kavitha Arivalagan, Creative writers, Dharmapuri)
Tamil Short Story: நிலாவின் மந்திரச் சொல்!
Ladies Finger: வெண்டைக்காய் ஒரு விளையாட்டு பொருளா?
அர்கியம் அமைப்பின் AI-ஆதார் செயலி அறிமுகம்
நிலவின் கவிதை!
மனம் திறந்து பேசுதடா .. மாந்தோப்பில் கிளி இரண்டு!
எங்கே எனது கவிதை!
ஓர் நதி ஓர் பெளர்ணமி ஓர் ஓடம்!
Forget your age... சாதிக்கும் எண்ணம் இருக்கும் வரை.. என்றும் நீங்கள் இளையவரே!
மாம்பழ பரிசு.. விஷாலின் விளையாட்டுகள் (12)
{{comments.comment}}