அமைதி .. சத்தம் இல்லாமல் வந்தபோது...!

Jan 19, 2026,05:03 PM IST

-கவிதா அறிவழகன்


அமைதி 

சத்தம் இல்லாமல் வந்தபோது....

சத்தங்கள் எல்லாம்

என்னை விட்டு விலகிய போது,

ஒரு ஆழமான நிசப்தம்

என் நெஞ்சுக்குள்

மெல்ல வந்து அமர்ந்தது.


எந்தக் கதையும் சொல்லாமல்,

எந்தக் கவிதையும் உரைக்காமல்,

எந்தக் கதவையும் தட்டாமல்,

அமைதி,

ஒரு ஆத்மத் தோழி போல

என் அருகில் வந்து உட்கார்ந்தது.




அந்த தோழி

வலிகளைப் பற்றி பேசவில்லை,

மனதின் பாரங்களை நினைவூட்டவில்லை,

அழியாத நினைவுகளை

தூண்டவும்

இல்லை.


அதற்கு மாறாக,

ஒரு புன்னகை மட்டும்

மௌனமாய் அங்கே

பூத்தது.


அப்போது தான் புரிந்தது---

அமைதி என்பது

வெற்றிக்குப் பின்

வருவது அல்ல,

தாங்கும் மனப்பக்குவம்

வந்த பின் மெல்ல கனிவது

அமைதி.


சத்தம் இல்லாமல் 

வந்தபோது நான்

அதைத் தடுத்து நிறுத்தவில்லை,

ஏனெனில்,

அந்த அமைதியில் தான்,

நான் யாருக்கும் நிரூபிக்க வேண்டிய நிர்ப்பந்தங்கள் இல்லாமல்

முதன்முறையாக

'நான்' நானாகவே

இருந்தேன்.


(Kavitha Arivalagan, Creative writers, Dharmapuri)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்

news

சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?

news

'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்

news

ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!

news

எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை

news

சிங்காரத்தேனே தென்மதுர மானே !

news

நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?

news

பாறையும் செடியும்!

news

கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்