திருப்பதி பிரம்மோற்சவம் மற்றும் குலசை தசரா விழாவிற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Meenakshi
Sep 25, 2025,04:43 PM IST

சென்னை: திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தமிழகத்தில் இருந்து சிறப்பு பேருந்துகளும், குலசை தசரா விழாவை முன்னிட்டு சென்னை, கோவையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


பண்டிகை காலம் என்பதால் மக்கள் கூட்டம் பேருந்து நிலையங்களில் அதிகளவில் காணப்படும். இதனால் பேருந்துகளின் கட்டணமும் அதிகமாக வசூலிக்கப்படும். இதில் இருந்து பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அவ்வப்போது சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், தற்போது திருப்பதி பிரம்மோற்சவம் மற்றும் குலசை தசரா விழாவிற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.




திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தமிழகத்தின் முக்கிய பகுதிகளான சென்னை, திருச்சி, தஞ்சை, சேலம், கோவை, மதுரை, காரைக்குடி, கும்பகோணம், நாகை, செங்கோட்டையில் இருந்து திருப்பதிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.


அதேபோல், தசரா பண்டிகையை முன்னிட்டு சென்னை, கோவையில் இருந்து திருச்செந்தூர் குலசைக்கு அக்டோபர் வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான டிக்கெட் முன்பதிவினை www.tnstc.in என்ற இணையதளத்தில் சிறப்பு பேருந்துகளுக்கு டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. மேலும் அக்டோபர் 3ம் தேதி வரை இந்த சிறப்பு பேருந்துகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.