உறவுகள் உணர்த்தும் உண்மைகள்!

Su.tha Arivalagan
Dec 20, 2025,05:08 PM IST

- கலைவாணி ராமு


அன்பை திகட்டாமல் 

உணர்த்துவதில்

அம்மாவாய்

ஆனந்தத்தை

ஆள்ளித்

தருவதில் அப்பாவாய்

இன்னல்களை துடைக்க உதவும்

உற்ற நண்பனாய்




ஈடில்லா புகழை தருவதில் 

புதல்வராய்

உன்னத உணர்வை உணர்த்தும் 

உடன் பிறத்தவர்களாய்

ஊறார்களையும் உறவாக்கியும் எல்லாமுமாய் 

இறைவனையும் உறவாக்கியும் ஏனிப்படிகளாய்

நம்மை உயர்த்தும் ஆசிரியரையும் உறவாக்கி

ஐம்பூதங்களையும் (நீர்,நிலம், நெருப்பு,ஆகாயம், வாயு)

உறவாக்கி

ஒற்றுமையுடனும்

ஓயாமலும் உழைத்து

ஓளவை சொன்னது போல் (ஒப்புறவு ஒழுகு)

எஃகும் இரும்பும் போல் இனைபிரியா

உறவுகளுடன் இன்புற்று வாழ்க வளமுடன்


(கலைவாணி ராமு, புதுச்சேரியைச் சேர்ந்தவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார்)