- இரா.காயத்ரி
உணவுப் பொருட்டிகளில் சிறு கற்களா
சல்லடைக் கொண்டு சலித்திடுவோம் அல்லவா
மனிதர்கள் மனங்களை உணர ஏதேனும் உள்ளதா
தேடுகிறேன் மனிதர்களை , அவர்களில் நல்லவர்களை
நிறம் மாறும் பூக்கள் உண்டு
நிறம் மாறும் மனிதர்களைக் கண்டு
மனம் வருந்தி நின்ற படி
மனிதர்களை தேடுகிறேன் மௌனத்தில் ஆழ்ந்தபடி

விசித்திரமான உலகில் எதார்த்தங்களை மறந்து
வித்தியாசமாக கைப்பேசியில் கண்களை கவர்ந்து
அக்கம் பக்கம் என்ன நடக்கிறது
அதை கூட தெரியாமல் கடந்து
உறவுகளோடு உதடுகள் உறவாட மறந்து
ஊர்பேர் தெரியாத எவரைப்பற்றியோ அறிந்து
இதெல்லாம் பழக்கப்படாத மனிதர்களை தேடுகிறேன்
இருந்தால் சொல்லுங்கள் இருகரம் கூப்பி வணங்குகிறேன்.
(இரா.காயத்ரி, ஆசிரியர், தருமபுரி மாவட்டம், கிரியேட்டிவ் ரைட்டர்ஸ் குழுமத்தில் கலந்து கொண்டு எழுதுகிறார்)
FIFA WorldCup 2026: உலகக் கோப்பை கால்பந்து.. அமெரிக்காவில் அசத்தும் ஈரான்.. டிரம்பை கலாய்த்து மீம்ஸ்
பிரிட்டன் அரசியல்: 10 டவுனிங் ஸ்ட்ரீட்டின் சுழலும் கதவு.. கீர் ஸ்டார்மரும் பதவி விலகல்!
கையடக்கத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்.. அசத்தலாக சாதிக்கும் நெல்லை ஆசிரியர் பொன் ரேகா!
Chettinadu Recipes: செட்டிநாடு அடுப்படியில் அதிரடி ஸ்வீட்.. மணக்க மணக்க கோதுமை அல்வா!
Monday Motivation: வாழ்வித்த வாழ்த்துகள் (சிறுகதை)
Tamil Short Story: நிறைவேறாத கல்லூரிக்கனவு!
தில்லைக்கூத்தன் கோயில்.. சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோவில் சிறப்புகள்!
இன்னிக்கி ஒரு பிடி.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!
அன்பென்றாலே அப்பா
{{comments.comment}}