- இரா.காயத்ரி
உணவுப் பொருட்டிகளில் சிறு கற்களா
சல்லடைக் கொண்டு சலித்திடுவோம் அல்லவா
மனிதர்கள் மனங்களை உணர ஏதேனும் உள்ளதா
தேடுகிறேன் மனிதர்களை , அவர்களில் நல்லவர்களை
நிறம் மாறும் பூக்கள் உண்டு
நிறம் மாறும் மனிதர்களைக் கண்டு
மனம் வருந்தி நின்ற படி
மனிதர்களை தேடுகிறேன் மௌனத்தில் ஆழ்ந்தபடி

விசித்திரமான உலகில் எதார்த்தங்களை மறந்து
வித்தியாசமாக கைப்பேசியில் கண்களை கவர்ந்து
அக்கம் பக்கம் என்ன நடக்கிறது
அதை கூட தெரியாமல் கடந்து
உறவுகளோடு உதடுகள் உறவாட மறந்து
ஊர்பேர் தெரியாத எவரைப்பற்றியோ அறிந்து
இதெல்லாம் பழக்கப்படாத மனிதர்களை தேடுகிறேன்
இருந்தால் சொல்லுங்கள் இருகரம் கூப்பி வணங்குகிறேன்.
(இரா.காயத்ரி, ஆசிரியர், தருமபுரி மாவட்டம், கிரியேட்டிவ் ரைட்டர்ஸ் குழுமத்தில் கலந்து கொண்டு எழுதுகிறார்)
Iran War: ஈரான் மீதான போர் நிறுத்தி வைப்பு: அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு
அதிமுக கூட்டணியில் பாஜக-27, அமமுக-11, பாமக -18 தொகுதிகள் ஒதுக்கீடு
நான் ஒருவன் தான் உண்மையான எதிர்க்கட்சி...தமிழர் கட்சி சீமான் ஆவேசம்
ஒரு கார் வாங்க எங்களுக்கு தகுதி இல்லையா?...பிரஸ்மீட்டில் கொந்தளித்த பிரேமலதா விஜயகாந்த்
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செம மழை காத்திருக்கிறது.. தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்!
தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கு வராத ஜி.கே.வாசன்...காரணம் இது தானா?
வீரத்தின் அடையாளம்.. மறக்க முடியாத பஞ்சாப் சிங்கம் பகத்சிங்!
திமுகவின் ஏவல்துறையாகக் காவல்துறை: நயினார் நாகேந்திரன் தாக்கு!
திருத்துறைப்பூண்டி பொன்னிறை புற்றடி மாரியம்மன் கோவில் திருவிழா
{{comments.comment}}