தேடுகிறேன் நல்ல மனிதர்களை

Dec 20, 2025,03:57 PM IST

- இரா.காயத்ரி


உணவுப் பொருட்டிகளில் சிறு கற்களா

சல்லடைக் கொண்டு சலித்திடுவோம் அல்லவா


மனிதர்கள் மனங்களை உணர ஏதேனும் உள்ளதா

தேடுகிறேன் மனிதர்களை , அவர்களில் நல்லவர்களை 


நிறம் மாறும் பூக்கள் உண்டு

நிறம் மாறும் மனிதர்களைக் கண்டு


மனம் வருந்தி நின்ற படி

மனிதர்களை தேடுகிறேன் மௌனத்தில் ஆழ்ந்தபடி




விசித்திரமான உலகில் எதார்த்தங்களை மறந்து

வித்தியாசமாக கைப்பேசியில் கண்களை கவர்ந்து


அக்கம் பக்கம் என்ன நடக்கிறது

அதை கூட தெரியாமல் கடந்து


உறவுகளோடு உதடுகள்  உறவாட மறந்து

ஊர்பேர் தெரியாத எவரைப்பற்றியோ அறிந்து


இதெல்லாம் பழக்கப்படாத மனிதர்களை தேடுகிறேன்

இருந்தால் சொல்லுங்கள் இருகரம் கூப்பி வணங்குகிறேன்.


(இரா.காயத்ரி, ஆசிரியர், தருமபுரி மாவட்டம், கிரியேட்டிவ் ரைட்டர்ஸ் குழுமத்தில் கலந்து கொண்டு எழுதுகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

"அந்தப் பெரிய இடம் யார்?" - மடப்புரம் அஜித்குமார் மரண விவகாரத்தில் தாய் ஆவேச பேட்டி

news

2.5 கோடி ஆதார் எண்களை முடக்கியது மத்திய அரசு...காரணம் இது தானாம்

news

தேர்தல் இலவச வாக்குறுதிகளுக்கு எதிரான பொதுநல மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்

news

சட்டசபைத் தேர்தல் 2026.. திமுக தேர்தல் அறிக்கை விரைவில் வெளியீடு: கனிமொழி எம்.பி தகவல்

news

Layoff: சசிதரூர் மகனை வேலையில் இருந்து நீக்கிய வாஷிங்டன் போஸ்ட் நிறுவனம்!

news

தை மாத சங்கடஹர சதுர்த்தி.. விநாயகரை வணங்கி இன்னல்கள் நீங்கி.. நலம் பெறுக!

news

வாழ்க்கை நமக்கு சந்தோஷத்தை கொடுப்பதற்காக அல்ல (Life is not here to make us Happy)

news

மோதல் போல காட்சி படுத்தி மாயம் செய்கிறாய்.. காதல் !

news

நாடாளுமன்றத்தில் இன்று பிரதமர் நரேந்திர மோடி உரை... எதிர்க்கட்சிகளுக்கு பதிலளிக்கிறார்

அதிகம் பார்க்கும் செய்திகள்